
இடையகோட்டை ஊராட்சியில் நூற்றாண்டுக்கு முன் ஜீவசமாதி அடைந்த சித்தருக்கு சிறப்பு வழிபாடு.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையகோட்டை ஊராட்சி பேருந்து நிலையத்திற்கு அருகில் இடையகோட்டை ஜமீன் அரண்மனை இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு ஆங்கிலேயர் காலத்தில் ஜமீன் சமஸ்தானமான விழங்கிய இடையகோட்டை பகுதியில் ஜீவசமாதி அடைந்த சுவாமி சித்தருக்கு ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா அன்று சுவாமி சித்தருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அரண்மனை ஜமீன் வாரிசுதாரர் சரவணன் மற்றும் இடையகோட்டை வியாபாரிகள் ஒரு ங்கிணைந்து மறைந்த சித்தருக்கு ஆண்டுதோறும் தேங்காய் பழம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் சுண்டல் போன்ற நெய்வேத்தியங்கள் படையலிட் மறைந்த சுவாமி சித்திரை வழிபட்டனர் இங்கு சுவாமி சித்திரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் உடனடியாக நடப்பதாகவும் பல அதிசயம், சுபகாரியங்கள் கை கூடி வருவதாகவும் பொதுமக்களும் அங்கிருக்கும் வியாபாரிகளும் கூறுவது நம்மை ஆச்சரியப்பட செய்கிறது.
இந்த சிறப்பு சுவாமி சித்தர் வழிபாட்டுநிகழ்வில் நாகா டீக்கடை உரிமையாளர் பாலு மற்றும் எண்ணெய் கடை உரிமையாளர் துரைசாமி நூர்தீன் ஹார்டுவேய்ஸ் உரிமையாளர்கள் பேன்சி ஸ்டோர் சேக் பரித்,விமல் ஸ்டுடியோ, அன்பு உணவகம் மற்றும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சித்தர் ஜீவசமாதியில் சிறப்பு வழிபாடுகள் செய்து சித்தரின் அருளை பெற்றுச் சென்றனர்.
இந்த ஆன்மீக சிறப்புவழிபாட்டில் சிறப்பு அழைப்பாளராக வி.சி.க வடிவேல் கலந்து கொண்டார் அதுமட்டுமின்றி இடையகோட்டை சுற்றியுள்ள கிராம மக்களும் ஆன்மீகப் பெரியோர்களும் பெருந்திரளானோர் கலந்து கொண்டு ஸ்வாமி சித்தர் ஜீவ சமாதியில் சிறப்பு வழிபாடு செய்தனர்.