June 8, 2025
மதுரை பிபி குளத்தில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தை இடிக்கச் சொல்லி 2வது முறையாக உத்தரவிட்ட நீதிமன்றம்.

மதுரை பிபி குளத்தில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தை இடிக்கச் சொல்லி 2வது முறையாக உத்தரவிட்ட நீதிமன்றம்.

ஆளும் அரசுக்கு எதிராக கட்சி அலுவலகத்தை இடிப்பது தர்ம சங்கடத்தில் அதிகாரிகள்நீதிமன்றம் உத்தரவு நிறைவேற்றப்படுமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி.

தமிழகத்தில் இன்றைய காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் மத்தவங்க பிரச்சனை ஒருபுறம் இருக்கு என்பதில் ஐயமில்லை. அதை மறுக்கவும் முடியாது அந்த வகையில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பேசக்கூடிய ஒரு மாநகராட்சி என்று சொன்னால் அது மதுரை மாநகராட்சி . அப்படிப்பட்ட மதுரை மாநகராட்சியில் பிபி குளம் என்ற ஒரு பகுதியில் முல்லை நகர் சுமார் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.

அப்படி உருவான அந்த இடத்தில் சுமார் ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு திமுக கட்சி அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்சி அலுவலகம் தொடர்ந்து பிபிகுளம் நீர்நிலை கொண்ட ஒரு கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடுக்கிறார்.

அதன்படி நீர் நிலைகளில் அமைக்கப்பட்டுள்ள கட்சி அலுவலகங்களை இடிக்க ஒரு உத்தரவை மதுரை நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதை அறிந்த திமுகவைச் சேர்ந்த ரவீந்திரன் என்றவர் ஒரு மீண்டும் ஒரு வழக்கை அதே நீதிமன்றத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை மேல் முறையிட்டு மனுவாக விசாரித்து இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்கிறார்.

இதை அறிந்த நீதிபதிகள் ஏற்கனவே நீதிமன்றம் நீர்நிலைகளில் உள்ள கட்டிடங்களை, மற்றும் திமுக அலுவலகங்களையும் இடிக்க உத்தரவிட்டிருக்கிறோம். அதனை இடித்து விட்டீர்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அந்நிலையில் அந்த அலுவலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துவிட்டு பயன்பாட்டின்றி தற்போது வைத்துள்ளார்கள் என்ற ஒரு பதிலை திமுக சார்பாக வழக்கு தொடர்ந்த ரவீந்திரன் தரப்பு வைக்கில் வாதிடுகிறார்.

இதனை விசாரணை செய்த நீதிபதிகள் உடனடியாக பிபி குளம் கண்மாய் ஆக்கிரமிப்பு இடத்தில் திமுக கட்சி அலுவலகத்தை இடித்து விட்டு இடித்ததற்கான ஆதாரத்தையும் அதனுடைய அறிக்கையும் சமர்ப்பிக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்னும் கட்சி அலுவலகம் இடிக்கப்படவில்லை. தனது திமுக கட்சி அலுவலகம் என்பதால் நீதிமன்ற உத்தரவுக்கு உடனடியாக நிறைவேற்றாமல் ஏதோ காரணங்களை கூறி இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.

ஆனால் கரூர் மாவட்டம் வெள்ளமலை பகுதியில் ஒரு சிறு குடிசைகளை அமைத்து ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர். அந்தக் கட்டிடத்தை உடனே இடிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது அதனை எந்த விதத்திலும் தடுக்காமல் உடனடியாக நீதிமன்றத்தின் உடைய உத்தரவை நிறைவேற்றி ஆக வேண்டும் என்று திமுக அரசு அதிகாரிகள் உடனே அகற்றி மக்களை உடனே வெளியேற்றினார்கள்.

ஆனால் அதே போன்று இங்கு நீதிமன்றம் உத்தரவிட்டோம் திமுக அலுவலக கட்டிடம் என்பதால் அகற்றாமல் காலதாமணம் செய்து வருகின்றன. இதற்கு அவர்கள் சொல்லக்கூடிய காரணம் 30 ஆண்டுகளுக்கு மேலாக உரிய மாநகராட்சிக்கு வரி செலுத்தி இருக்கிறோம் அதுபோன்று பல்வேறு காரணங்களைச் சொல்லி இழுத்தடிப்பது வழக்கமாக வைத்துள்ளார்கள்.

ஆனால் கரூர் மாவட்ட வெள்ளை மழை பகுதியில் பல தலைமுறைகளாக வரி மின்சாரம் வரிகள் எல்லாம் கட்டி இருக்கிறார்கள் ஆனால் அதை மட்டும் வேகமாக நீதிமன்ற உத்தரவு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அதிகாரிகள் இடித்தது எந்த வகையில் நியாயம்.

அதே போன்று தான் இந்த நீதிமன்றத்தின் உத்தரவு தமிழகத்தில் ஏற்கனவே காடுகளையும் நீர் நிலைகளையும் அரசு நிலங்களையும் அதிகாரிகளின் துணையோடு அளித்து பணமாக்கி வைத்திருக்கிறார்கள் என்பது ஒருபுறம் பேசப்படுகிறது.

இப்படி தேடி தேடி இயற்கை அழித்து வரும் திமுக கட்சி கட்சி அலுவலகம் கட்ட நீர் நிலைகள் தான் கிடைத்ததா? நீர்நிலைகளையும், மலைப்பகுதிகளையும், பணம் என்ற போர்வைக்கு இயற்கை அழித்து வந்தால் வருங்கால சன்னதியில் வாழ்வாதாம் என்னவாகும் என்று ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் கேள்வியாக எழுப்பி உள்ளார்கள்.

மதுரை பிபி குளத்தைப் பொறுத்தவரை உடனடியாக கட்சி அலுவலகத்தை திமுக கட்சி இடித்து விடுமா? இல்லை மேல்முறையீடு செய்து அங்கு நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விடுமா என்ற கேள்வியையும் கேட்டு இருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல இதை அரசு நீதிமன்றம் போட்ட பிடிவாரண்டுக்கு சவுக்கு சங்கர் என்பவரை ஒரே நாளில் விரட்டி விரட்டி கைது செய்தனர்.

ஆனால் அதே நீதிமன்ற உத்தரவான அதுவும் இரண்டாவது முறை உத்தரவாக திமுக கட்சி அலுவலகத்தை இடிப்பதை உறுதிப்படுத்துமா? இல்லை மேல்முறையீடு செய்து காலதாமதம் செய்யுமா என்ற சூழ்நிலையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டிய நிலையில் தமிழக மக்கள் உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.