
பழனி நகராட்சிக்கு ஒத்துழைக்காத பழனி திருக்கோவில் நிர்வாகம்.-அமைச்சர் சட்டமன்றமும் உறுப்பினர் முன்னிலையில் பழனி நகர் மன்ற தலைவர் ஆவேசம்.
பழனி கோவில் கேட்கும் அனைத்து பணிகளையும் பழனி நகராட்சி நிர்வாகம் செய்துகொடுக்கும் நிலையில் பழனி நகராட்சி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு பழனி கோவில் நிர்வாகம் தகுந்த மரியாதை அளிப்பதில்லை என்றும், பழனி வாழ் மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணியில் அடிவாரம் கிரி வீதியில் 800மீட்டர் தூரமுள்ள பகுதியில் குழாய் பதிக்க நகராட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு, கோவில்நிர்வாகம் தடையாக இருப்பதாகவும், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில்குமார் இதுகுறித்து பழனி கோவில் நிர்வாகத்திடம் முட்டி மோதி பார்த்துவிட்டார். ஆனால் அவருக்கும் கோவில் நிர்வாகம் மதிப்பளிப்பதில்லை என்றும், இதனாலேயே பழனி கோவிலுக்கு வருவதை பழனி நகர்மன்ற உறுப்பினர்கள் தவிர்த்து விடுவதாகவும், எனவே குடிநீர்குழாய் பதிக்கும் நடவடிக்கைக்கு கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்கவேண்டும் என்றும் பழனி நகர்மன்றத் தலைவர் உமாமகேஸ்வரி பேச்சு.
காவல் நிலையத்தில் நடைபெற்ற சிசிடிவி கண்காணிப்பு அறை திறப்பு விழாவில் அமைச்சர் மற்றும் பழநி எம்எல்ஏ முன்னிலையில் பழனி நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரி பேச்சால் பரபரப்பு.