
பழனி அடுத்துள்ள தெற்குத்தாதநாயக்கன்பட்டி பகுதியில் கூரை வீடு தீப்பிடித்து சேதம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள தெற்குத்தாதநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்று என்ற சின்னச்சாமி, 65, இவரது வீட்டில் முன் கட்டப்பட்டிருந்த கூரை வீடு இன்று காலை 11:30 மணியளவில் வீட்டின் அருகில் போடப்பட்டிருந்த விறகடுப்பின் மூலம் தீ பறவி கூரையின் மேல் தீ பிடித்து எறிந்தது.

அருகில் இருந்தவர்கள் அலறி அடித்தபடி வெளியேறினார்கள்.

தகவல் அறிந்து வந்த பழனி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் வைக்கப்பட்டிருந்த கட்டில் வைக்கோல் போன்றவை சேதமடைந்தன. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.