June 9, 2025
எஸ் மேட்டுப்பட்டியில் தமிழக அரசு வழங்கும் நலவாரிய அட்டை வழங்கும் விழா

எஸ் மேட்டுப்பட்டியில் தமிழக அரசு வழங்கும் நலவாரிய அட்டை வழங்கும் விழா

அரசு வழங்கும் நலத்திட்டங்களை பெறுவதற்கு மக்கள் முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சீர் மரபினர் நலவாரிய மாநில உறுப்பினர் வேண்டுகோள்
நிலக்கோட்டை, பிப்.6- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே எஸ் மேட்டுப்பட்டியில் தமிழக அரசு சீர் மரபினர் நல வாரிய அட்டை வழங்கும் விழாவும், அரசின் நலத்திட்டங்களை வருவது குறித்த விழிப்புணர்வு முகாமும் தமிழ்நாடு அரசு சீர் மரபினர் நல வாரிய மாநில உறுப்பினர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் ராஜாராம் , மாநில பொருளாளர் இளங்கோ ஆகியோர்கள் முன்னிலையில் வைத்தனர். நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு செயலாளர் முருகன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக அரசின் சீர் மரபினர் நல வாரிய மாநில உறுப்பினர் சந்திரன் மக்கள் மத்தியில் அடையாள அட்டை வழங்கி பேசியதாவது.

இன்றைய அரசு நலவாரிய அட்டையை வீடு தேடி மனுக்களை பெற்று வீடு தேடி நலவாரிய அட்டை வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு நம் மக்கள் மீது அரசு மிக அக்கறை எடுத்துக்கொண்டு சீர் மரபினர் நலத்திட்டங்களை பெறுவதற்கு முன்வர வேண்டும். சீர் மரபினர் நலவாரிய அட்டை வருங்கால சங்கதிகளுக்கு மிகப்பெரிய அளவில் உதவிக்கரம் ஆக இருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொண்டு அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கு முன் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ் மேட்டுப்பட்டி கிராம பொறுப்பாளர்கள் ஆனந்தன், தோப்புச்சாமி, மகளிர் அணி நிலக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் தவம், சாரதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.