June 8, 2025
யார் அந்த சார் வழக்கு...

யார் அந்த சார் வழக்கு...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கான, குற்றவாளி ஞானசேகர் வழக்கில் தில்லுமுல்லு செய்ததாக தகவல் வெளியாக உள்ளது.

அதிகாரிகளுக்கு தொடர்ந்து பல்வேறு அழுத்தங்கள் கொடுப்பதால் ஆதாரங்களை மறைப்பது போன்ற பல விஷயங்கள் நடந்திருக்கிறது.

அந்த சம்பவம் குறித்து இப்போது சில உண்மை தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு பிரிவு நியமித்தது. அதில், உயர்நீதிமன்றம் மிகப்பெரிய தவறையும் செய்திருக்கிறது. நீதிமன்றம் இந்த விசயத்தில் எப்படி கோட்டை விட்டது என பலர் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு சென்றது, உயர் நீதிமன்றம் அதை எப்போது தானாக முன்வந்து வழக்கை விசாரித்தது, இதில் கமிஷனர் அந்த சார் என்கிற நபர் யாரும் இல்லை அதில் ஒருநபர் தான் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதில் ஆளும் கட்சிக்கு அதிகாரிகள் துணை போவதாக சந்தேகமடைந்த உயர்நீதிமன்றம் , உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க ஒரு சிறப்பு புலனாய்வு பிரிவை உயர்நீதிமன்றம் நியமிக்கிறது. அந்த பிரிவில் மூன்று பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

நியமனம் செய்த மூன்று பெண் அதிகாரிகளும் சென்னை மாநகர கமிஷனர் அருண் என்பவருக்கு அடுத்த இடத்தில் உள்ள துணை கமிஷனர்கள் ஆவர்.

இவர்களை எப்படி சிறப்பு புலனாய்வு பிரிவில் அதிகாரிகளாக நீதிபதிகள் நியமித்தனர்.

இதில், உயர்நீதிமன்ற மிகப்பெரிய தவறை செய்திருக்கிறது. ஒரு உயர் அதிகாரிக்கு கீழே பணியாற்றக்கூடிய அதிகாரிகளை முக்கியமான வழக்கின் விசாரணை குழுவில் நியமித்தால், அந்த வழக்கில் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டுத்தான் வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வார்கள். இந்த விஷயம் நீதிபதிக்கு எப்படி தெரியாமல் போனது.

கமிஷனர் அருண் என்பவருக்கு கீழ் வேலை செய்யும் மூன்று பெண் துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டது தவறு என பலர் கருத்தும் தெரிவித்தும் வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஒரு கருத்தை தெரிவித்திருந்தது.

சில முக்கிய வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்காமல், அந்தந்த மாநிலத்தின் ஐபிஎஸ் அதிகாரி நியமனம் செய்து வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் சிபிசிஐடி என்கிற சிறப்பு தனிப்பிரிவு இருக்கிறது அந்த பிரிவில் இருக்கின்ற அதிகாரிகளை வைத்து இந்த பாலியல் வழக்கை விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கலாம்.

சிபிசிஐடி தமிழக அரசின் கீழ் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் இடம் பெறாது. இந்த சூழலில் உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்றிருந்த சைபர் கிரைம் உயர் அதிகாரி ஒருவர் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

அதில் பாலியல் வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட குழுவில் இருந்து என்னே வெளியேற்றுங்கள் என்பதாக கூறப்பட்டிருந்தது. மேலும் அவருடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஒரு வழக்கை உண்மைத்தன்மையாக விசாரணை செய்வதற்கு முழு சுதந்திரம் கிடைக்காத நிலையில் அந்த குழுவில் இருக்கிற ஒரு உயர் அதிகாரி தற்போது ராஜினாமா செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயர்நீதிமன்றம் பாலியல் வழக்கை தனிப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்து அதனை முறையாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது.

உயர்அதிகாரி பேச்சைக் கேட்டு பொய்யான விசாரணை செய்து அறிக்கைகளை தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் சில வழக்கறிஞர்கள் தயாராக இருப்பதாகவும் தெரியவருகிறது.

அதிகாரி மீது வழக்கு பத வாய்ப்பு இருக்கிறது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவருடைய கோரிக்கையாக உள்ளது.

ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் , உயர் அதிகாரிகளுக்காவும் எந்த தவறும் செய்ய கூடாது இந்த வழக்கை தமிழக மக்கள் தெளிவாக கவனித்து வருகின்றனர்.

மேலும், உயர்நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய சில வழக்கறிஞர்கள் இந்த வழக்கை மிகச்சரியாக கவனித்து வருகின்றனர்.

பாலியல் வழக்கு விவகாரத்தில் ஏதாவது முறைகேடு நடந்தால் , விசாரணை குழுவில் இருக்கிற மூன்று பெண் காவல் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

இதனால் அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம் சூடு பிடித்துள்ளது.

நமது நிருபர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.