
கந்தர்வக்கோட்டை அருகே சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக ஈர நிலத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி.
கந்தர்வக்கோட்டை பிப் 04.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக ஈர நிலத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி நடைபெற்றது. இப்போ போட்டியில் ஆறு ஏழு எட்டு வகுப்பைச் சேர்ந்த 35 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை கோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலக ஈர நில தினம் குறித்து பேசும் பொழுது
இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னையில் நடைபெற்றது.
அப்போது மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைத்து பள்ளிகளிலும் காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவித்துள்ளதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வருக்கு சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றும், உலக ஈரநில தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது . இது ஒரு உலகளாவிய தளமாக செயல்படவும், சுற்றுச்சூழலில் ஈரநிலங்களின் முக்கியத்துவம் மற்றும் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரநிலப் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ராம்சர் மாநாடு, பிப்ரவரி 2, 1971 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, இது உலக ஈரநில தினத்திற்கான களத்தை அமைத்தது.
உலக ஈரநில தினம் முதன்முதலில் 1997 இல் கொண்டாடப்பட்டது.
பல்லுயிர் பெருக்கம், காலநிலை மற்றும் நீர் ஒழுங்குமுறைக்கு ஈரநிலங்களின் முக்கியத்துவத்தைப் பாதுகாத்து மீட்டெடுப்பதற்கான அழைப்பாக இது செயல்படுகிறது.
உலக ஈரநில தினத்தின் முக்கியத்துவம்:
இந்த நாள் உலகம் முழுவதும் ஈரநிலங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் அவற்றின் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது.
உலகளாவிய ஈரநிலப் பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மைக்காக நாடுகளை ஒன்றிணைப்பதில் இந்த நாள் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாழ்விட இழப்பு, மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற ஈரநிலங்களைப் பாதிக்கும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது.
சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தில் கவனம் செலுத்துவதன் மூலம், சமூகங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஈரநிலப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க ஊக்குவிக்கிறது.
பூமியின் காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் ஈரநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட முக்கிய சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை வழங்குகின்றன.
இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் உலகெங்கிலும் உள்ள வாழ்வாதாரங்களையும் பொருளாதாரங்களையும் ஆதரிக்கின்றன.
வெள்ளம், வறட்சி மற்றும் புயல்களுக்கு எதிராக சதுப்பு நிலங்கள் ஒரு இடையகமாக செயல்படுகின்றன.
அவை கணிசமான அளவு கார்பனை சேமித்து, காலநிலை மாற்றத்தைத் தணிக்கின்றன.
ஈரநிலங்கள் கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் அழகியல் மதிப்புகளுக்கு பங்களிக்கின்றன என்று பேசினார்.
இந்நிகழ்வில் ஆசிரியர் சிந்தியா கணிப்பொறி உதவியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.