
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பொது விருந்து நடைபெற்றது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று 3.2.2025 திங்கட்கிழமை பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பொது விருந்து மலைக்கோயிலில் நடைபெற்றது.

இப்போது விருந்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பொன்னி அரிசி சாப்பாடு, குழம்பு, ரசம், மோர், பொரியல், அப்பளம், வடை, பாயாசம், ஊறுகாய் உணவு பரிமாறப்பட்டது இதில் சுமார் 300 பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சிறப்பு விருந்தினராக திருக்கோயில் அறங்காவலர்.அன்னபூரணி, பழனி நகர மன்ற துணைத் தலைவர், கந்தசாமி, மற்றும் திருக்கோவில் இணை ஆணையர் துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






