April 19, 2025
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்.

கடந்த சில நாட்களுக்கு முன் பழனி தண்டாயுதபாணி கோவிலின் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் ஒன்று கூடி திருக்கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவருமான கே.எம்.சுப்பிரமணியம் தேர்ந்தெடுத்துள்ளனர்..

கோவில் அறங்காவலர் உறுப்பினராக நியமிக்க சொல்லி பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,அந்த தொகுதி மாவட்ட செயலாளருமான திரு.ஐபி.செந்தில்குமார் சில பேரை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விடம் பரிந்துரை செய்ததாகவும்
அது நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வருகிறது.

தொகுதி எம்எல்ஏ,மாவட்ட செயலாளரை சக கட்சி அமைச்சரே மதிக்காவிட்டால்
அந்த பகுதி அதிகாரிகள் எப்படி மதிப்பான்..

திரு.சேகர் பாபு மாவட்ட செயலாளராக இருக்கும் ஆறு தொகுதிகளில் இது போன்று நடந்தால் பொறுத்து கொள்வாரா? இளந்தலைவர் சொல்வதை கூட சில சமயம் செயல்பாபு ஏற்பதில்லை என்ற தகவல் கூட வருகிறது..

ஐபி யாரையும்,அவர் மகனையும் திட்டமிட்டு சிலர் ஒதுக்குகிறார்களா?

தலைவர் தலையிட்டு தீர்வு காணவேண்டும்.

பழனி தண்டாயுதபாணி கோவிலிலில் ஏழு பேர் வரை உறுப்பினர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு உண்டாம். திரு.செந்தில் குமார் பரிந்துரை செய்தவர்களையும் உட்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.