
ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது இதில் பல்வேறு மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தனது குறைகளை புகார் மனுவாக கொடுத்தனர்.
இம் முகாமில் பழனி சார் ஆட்சியர் கிஷன்குமார் முன்னிலை வகித்தார் தனி வட்டாட்சியர் மங்களபாண்டியன் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், உதவித்தொகை குடும்ப அட்டைகள் அடையாள அட்டைகள் வழங்கி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இதில் ஒட்டன்சத்திரம் கிராம நிர்வாக அலுவலர் பாபு, அத்திக்கோம்பை கிராம நிர்வாக அலுவலர் ஹரி கிருஷ்ணன், ஒட்டன்சத்திரம் வருவாய் ஆய்வாளர் திலகவதி, அத்திக்கோம்பை கிராம நிர்வாக உதவியாளர் சபரிநாத் ஒட்டன்சத்திரம் கிராம நிர்வாக உதவியாளர்கள் விஜயபாஸ்கரன், பைசல்முகம்மது , மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.