June 9, 2025
மல்லாங் கிணறில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மல்லாங் கிணறில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காரியாபட்டி – ஜன- 29.

மல்லாங்கிணறில் மாணவர்   களுக்கான  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.         நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், 

நெடுஞ்சாலை துறை கட்டுமான பிரிவு சார்பில் பள்ளி மாணவர் களுக்கான சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மல்லாங்கிணறு எம்.எஸ். பி. நாடார் பள்ளியில் நடை பெற்றது.

நெல்லை நெடுஞ்சாலை துறை சாலை பாதுகாப்பு திட்ட செயற் பொறியாளர்
சுந்தர் சிங் தலைமை வகித்தார் .

பள்ளித் தலைமை ஆசிரியர் டேவிட் சுதாகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில்,
நெல்லை நெடுஞ்சாலை துறை சாலை பாதுகாப்பு திட்ட உதவி கோட்டப் பொறியாளர் சசிகலா சாலை பாதுகாப்பு விதிமுறைகள், குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில், மாணவர்கள் கடை பிடிக்க வேண்டிய. சாலை விதிகள், பாதுகாப்பு
சட்டங்கள், சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபாராதம்,
குறித்து வீடியோ படங்கள் மூலமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

அருப்புக் கோட்டை உதவி கோட்டப் பொறியாளர் முத்துச்சாமி , உதவி பொறியாளர் பெரிய திருமால், சாலை பாதுகாப்பு பிரிவு உதவிப் பொறியாளர்கள் செல்வன்,
லட்சுமி பிரியா உட்பட பலர கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.