April 16, 2025
நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று கல்லூரி கலையரங்கில்
மாணவர்களின் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ப.சத்தியமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நவலூர்குட்டப்பட்டு, கல்லூரி முதல்வர், முனைவர் ஜெ.லலிதா M.com. M. Phill, Ph.d அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

மேற்கண்ட நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பாக ஜீயபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் L. புண்ணியமூர்த்தி அவர்களும்,

சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் மாணவ மாணவிகள் பேருந்து மற்றும் சாலையில் பயணிக்கும் போது கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகள், சாலை விதிகள், தமிழக அளவில் நடைபெற்ற விபத்துகள் தொடர்பான விபரங்களை மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் R. கோவிந்தராஜ், இரு சக்கர வாகன ஒட்டிகள் கடை பிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் இன்னூயிர் காப்போம் நம்மை காக்கும் 48 மற்றும் குட் சாமரிட்டன் சட்டங்கள் தொடர்பாக மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பெ.அய்யாரப்பன் அவர்களும்,

திருச்சி ஹோண்டா சாலை பாதுகாப்பு பயிற்ச்சியாளர் பிரபு மற்றும் மாலதி அவர்கள் சாலை பாதுகாப்பு தொடர்பான பயிற்சி காணொளி, மற்றும் விபத்துகள் தொடர்பான காணொளிகளை மாணவ மாணவிகளிடம் திரையிட்டும் பயிற்சி அளித்தனர்.

முனைவர். சௌ. நான்சி ஆங்கிலத்துறை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.