
இந்தியாவின் முதல் ஆங்கில மொழி செய்தித்தாள் வெளியிடப்பட்டது: வரலாற்றில்இந்த நாள் - ஜனவரி 29
ஜனநாயகத்தின் நான்காவது துாண் பத்திரிகை.உண்மை தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதில் செய்தித்தாள் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள நாளிதழ் படிப்பது அவசியம்.

பெங்கால் கெசட் என்பது, பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரான கல்கத்தாவில் வெளியிடப்பட்ட ஆங்கில மொழி செய்தித்தாள் ஆகும். இது ஆசியாவில் அச்சிடப்பட்ட முதல் செய்தித்தாள் ஆகும். பெங்கால் கெசட்டின் சிறப்புகள்: இது இந்தியாவின் முதல் ஆங்கில மொழி செய்தித்தாள் ஆகும், இது 1780 ஜனவரி 29 அன்று வெளியிடப்பட்டது, இதை ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி தொடங்கினார், இது புனைகதை அல்லாத படைப்பாகும்.