
கோவையில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பொள்ளாச்சி போக்குவரத்து காவல்துறை, எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை கல்லூரியின் முதல்வர் டாக்டர் உ. சுமதி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் இரா.சக்திவேல் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் எஸ்.ஏ.ஐ நெல்சன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இப்பேரணியானது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கி நியூ ஸ்கீம் சாலை, காந்தி சிலை ரவுண்டானா மற்றும் பேருந்து நிலைய ரவுண்டானா வழியாக சென்று கோவை சாலையில் உள்ள ஆய்வு மாளிகையில் நிறைவுற்றது.
இப்பேரணியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரின் துணை முதல்வர் முனைவர் டாக்டர். செந்தில் நாயகி அவர்களும், கல்லூரின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் டாக்டர். சந்திரசேகர் அவர்களும், சாலை பாதுகாப்பு அமைப்பு பொறுப்பாளர் டாக்டர். இரா. ராஐரமான் அவர்களும் மற்றும் அக்கல்லூரியின் மாணவ மாணவிகளும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
உடன் கல்லூரியின் ஆசிரியர்களும், போக்குவரத்து காவல் துறை பணியாளர்களும் மற்றும் அறக்கட்டளையின் உறுபினர் அருண் பிரின்ஸ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் சார்பாக கலந்து கொண்டவர்களுக்கு குளிர்பானங்கள் பிஸ்கட் வழங்கப்பட்டது.