
கந்தர்வகோட்டை அருகே துளிர் வாசிப்பு திருவிழா நடைபெற்றது.
கந்தர்வக்கோட்டை ஜன 28.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துளிர் வாசிப்பு திருவிழா நடைபெற்றது. ஜனவரி மாதம் 2025 விஞ்ஞான துளிர் வாசிப்பு பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.
கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா ஒருங்கிணைத்து பேசியதாவது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மாதம் தோறும் அறிவியல் இதழான விஞ்ஞான துளிர் இதழ் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளும் விதமாக மாணவர்கள் அனைவரும் துளிர் இதழ்களை வாசிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு துளிர் வாசகர் திருவிழா என்று நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் அறிவியல் கட்டுரைகளை தெரிந்து கொள்கின்றனர். என்றும் மாணவர்கள் அனைவரும் துளிர் திறன்றிதல் தேர்வில் கலந்து கொண்டு விஞ்ஞான துளிர் இதழை பெற வேண்டும் என்று பேசினார்.
விஞ்ஞான துளிர் வாசிப்பு திருவிழாவில் இந்த வருடத்து அறிவியல் நாயகர் ஓர் ஈ என்ற தலைப்பில் ரிதன்யா மாறன் என்ற மாணவியும், ராபர்ட் ப்ரூஸ் ஃபுட் என்ற தலைப்பில் ரகுனா ஸ்ரீ என்ற மாணவியும், விவசாயத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள தொடர்பு என்ற தலைப்பில் தரணிகா என்ற மாணவியும், இயற்கை இலையும் செயற்கை இலையும் கோகுல சிவஸ்ரீ என்ற மாணவியும், விவேசினி திரைப்பட அறிமுகம் ஜெயஸ்ரீ என்ற மாணவியும், பொம்மை உருவங்கள் என்ற தலைப்பில் ரித்திகா ஸ்ரீ என்ற மாணவியும், மிதக்கும் உருளைக்கிழங்கு தலைப்பில் ஜாஸ்மின் என்ற மாணவியும், எப்படி திருப்பினாலும் பிடிவாதமாய் பகா எண்கள் தலைப்பில் யோகேஷ் என்ற மாணவரும், செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி என்ற தலைப்பில் முகேஷ் என்ற மாணவரும், காலநிலை மாற்றத்தை உணர்வோமா என்ற தலைப்பில் சிவகார்த்திகேயன் என்ற மாணவரும் பற்பசையா? மாத்திரையா? என்ற தலைப்பில் ராஜஸ்ரீ என்ற மாணவியும் கொடுத்து சிவந்த கைகள் என்ற தலைப்பில் பாஷினி என்ற மாணவியும், கணித புதிர் என்ற தலைப்பில் பிரியதர்ஷினி என்ற மாணவியும் துளிர் வாசிப்பு திருவிழாவில் கட்டுரைகளைவாசித்தனர். ஆறு ,ஏழு, எட்டு வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.