
சோழவந்தான் பிரளயநாதர் விசாக நட்சத்திர ஆலயத்தில் சோமவார பிரதோஷம் அபிஷேக அர்ச்சணைகள் நடைபெற்றது.
மதுரை அருகே, சோழவந்தான் பிரளயநாதர் விசாக நட்சத்திர ஆலயத்தில், சோமவார பிர தோஷத்தை முன்னிட்டு, சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி வந்தார்.

மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயம், யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயம், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், மதுரை சாத்தமங்கலம், ஆவின் பால விநாயகர் ஆலயம், மதுரை அருகே திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூல நாதர், மதுரை சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி ஆலயத்தில் சோமவார பிர தோஷத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, அர்ச்சணைகள் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை, தொழிலதிபர் எம். வி. எம். மணி, கவுன்சிலர்கள் எம். மருது பாண்டியன், எம். வள்ளியயில் கோயில் செயல் அலுவலர் ச. இளமதி, கணக்கர் சி. பூபதி, எழுத்தர் வசந்த் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.