June 9, 2025
வாடிப்பட்டியில்இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

வாடிப்பட்டியில்இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஓய்வூதியர் சங்க வளாகத்தில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் சர்வதேச உரிமை கள் கழகம் சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

இந்த முகாமிற்கு, சர்வதேச உரிமைகள் கழகம் மதுரை மேற்கு மாவட்டத்தலைவர் தவமணி தலைமை தாங்கினார். மண்டல துணை சேர்மன் செந்தில் குமார், துணை பொதுச் செயலாளர் ராஜேஸ், அமைப்பாளர் காமராஜ் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் முன்னிலை வகித்தனர்.

விராலிப்பட்டி முத்து வரவேற்றார். இந்த முகாமினை, மனித உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் டாக்டர் சுரேஷ் கண்ணன் முகாமினை துவக்கி வைத்தார். பொருளாளர் வழக்கறிஞர் ஆனந்தி குத்து விளக்கேற்றினார். இந்த முகாமில் கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் கோலஸ்ரா தலைமையில் செவிலியர்கள் ராஜேஸ்வரி, சங்கரி, மாதவி, ஒருங்கிணைப்பாளர் ஜெயகர் ஆகியோர் 89 பேருக்கு கண் பரிசோதனை செய்து 42 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், வடக்கு மாவட்ட தலைவர் நாகேந்திரன், மகளிரணி அன்னபூரணி, பவானி, கனிமொழி, வழக்கறிஞர் அபிநயா, மாவட்ட துணைத் தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி தலைவர் பரத், மாணவரணி தலைவர் தாரணி, தொகுதி தலைவர்கள் பிரகாஷ், குணபாலன் பூராஜன், சக்திவேல், சோழவந் தான் நகரத் தலைவர் கார்த்திக் ராஜா, பாண்டியராஜன், ராஜா கருப்பட்டி கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது ஏற்பாடுகளை, காக்கும்கரங்கள் நற்பணி மன்றத்தலைவர் கராத்தே சிவா, செயலாளர்கண்ணன் ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில், வாடிப்பட்டி நகரத் தலைவர் விஜயராம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.