
கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விளையாட்டு போட்டி நடைபெற்றது.
கந்தர்வகோட்டை ஜன 25.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியினை தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தொடங்கி வைத்தார். போட்டிகளை அறிவியல் ஆசிரியர் ரஹ்மத்துல்லா ஒருங்கிணைத்தார்.
முதல் வகுப்பிற்கு இசை நாற்காலி, இரண்டாம் வகுப்பிற்கு குளம் கரை, மூன்றாம் வகுப்பிற்கு ஓட்டப்பந்தயம், நான்காவது வகுப்பிற்கு நாடு பிடித்தல், ஐந்தாம் வகுப்பிற்கு செங்கல் தூக்கி பிடித்தல் ஆறாம் வகுப்பிற்கு கல் பொறுக்குதல் , ஏழாம் வகுப்பிற்கு தண்ணீர் நிரப்புதல், எட்டாம் வகுப்பிற்கு லெமன் ஸ்பூன் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு குடியரசு தின விழாவில் பரிசுகள் வழங்கி பாராட்டப்படும். போட்டியின் நடுவராக ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா, நிவின், செல்விஜாய், வெள்ளைச்சாமி, ஜென்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர் செயல்பட்டனர். மாணவர்கள் ஆர்வமுடன் போட்டிகளில் கலந்து கொண்டனர்.