June 8, 2025
திருவேடகம், விவேகானந்த கல்லூரியில்  “தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில்  “தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.

மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் வழிபாட்டு மண்டபத்தில் சுவாமி விவேகானந்தரின் 162வது பிறந்தநாள் தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது.

சுவாமி விவேகானந்த படிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வரலாற்று துறை உதவிப் பேராசிரியர் முருகன் வரவேற்ப்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் டி. வெங்கடேசன் தலைமையுரையில் “அச்சம் தவிர்” என்ற வாக்கிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர் என்பதை எடுத்துரைத்தார்.

கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த விவேகானந்தரின் பன்முகத்தன்மைகளை எடுத்துரைத்தார். கல்லூரி செயலர் சுவாமி வேதானந்த முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தனராக பட்டிமன்ற சிறப்பு பேச்சாளர் திரு. ஜோ.அருள் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று “எல்லாம் உனக்குள்ளே” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அகத்தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு நன்றியுரை ஆற்றினார். தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் கோ.பாலமுருகன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கே. கார்த்திகேயன், முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஜெய்சங்கர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என, அனைவரும் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.