
சுதந்திர போராட்ட வீரர், திருவுருவச்சிலை அமைச்சர் திறந்துவைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிவகங்கையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக,
சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் திருவுருவச்சிலையினை திறந்து வைத்ததை முன்னிட்டு, நகரம்பட்டியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நிறுவப்பட்டுள்ள வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் திருவுருவச்சிலைக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,
மற்றும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , சிவகங்கையில் இன்றையதினம்
நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக, சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் திருவுருவச்சிலையினை திறந்து வைத்ததை முன்னிட்டு, நகரம்பட்டியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நிறுவப்பட்டுள்ள வீரர் வாளுக்கு வேலி அம்பலம் திருவுருவச் சிலைக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , மற்றும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
அந்நிகழ்வுகளில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன, வாளுக்கு வேலி அம்பலம் திருவுருவச்சிலைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தெரிவிக்கையில், சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றிடும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் பொருட்டும், தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில், 200 ஆண்டுகளுக்கு முன்னதாக, நடந்துள்ள உண்மைச் சம்பவத்தை வெளிக்கொணருகின்ற வகையில், சுதந்திரப் போராட்டத்தில் தனது பங்களிப்பையும், தியாகத்தையும் முழுமாக அளித்த சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் புகழை உலகிற்கு பறைசாற்றுகின்ற வகையிலும், அதற்கு மெருக்கூட்டும் பொருட்டும், முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்கள், தன் பொன்மொழிகளால் வரலாற்று சிறப்புக்களை நூல்களாக பொறித்துள்ளார்.
அன்றைக்கு முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் , விதைத்த விதையின் பயனாக, தமிழ்நாடு முதலமைச்சர் , வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் புகழிற்கு வலுச்சேர்க்கின்ற வகையில், அன்னாரது பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடிட உத்தரவிட்டார்கள். அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும், வாளுக்கு வேலி அம்பலம் அவர்களுக்கு சிறப்பு சேர்த்திடும் வகையில், அன்னாருக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் நகரம்பட்டியில் திருவுருவச்சிலை அமைக்கப்பதற்கென, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 22.01.2024 அன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டப்பட்டு, அப்பணிகள் இனிதே நிறைவுற்று, வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் திருவுருவச்சிலை இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கை மாவட்டத்திற்கே நேரில் வருகை புரிந்து, கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது மேலும் சிறப்பிற்குரியதாகும்.
இதற்கான பெரும் முயற்சியில், நான் ஈடுபட்டதற்கான முழுப்பயனையும் அடைந்தமைக்கு, மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இதற்கான சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர், செய்தித்துறை அமைச்சர், சிவகங்கை மாவட்ட மக்களின் சார்பிலும், எனது சார்பிலும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றையதினம் செய்தித்துறை அமைச்சர் , காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் திருவுருவச்சிலை அமையப்பெற்றுள்ள நகரம்பட்டியில் நேரில் கலந்து கொண்டு, சிறப்பித்துள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து, நானும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் தற்போது, வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, அரசின் சார்பில் மரியாதை செலுத்தியுள்ளோம்.
மொழி, இனம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கென பாடுபட்டவர்களை கௌரவிக்கின்ற வகையிலும், அவர்களின் புகழை போற்றுகின்ற வகையிலும், அவர்களுக்கு நினைவகங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் திருவுருவச்சிலைகள் ஆகியவைகளை அமைத்து, எதிர்கால சந்ததியினர்கள் அறிந்து கொள்கின்ற வகையில், சிறப்பான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் , மேற்கொண்டு, தலைசிறந்த முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் , திகழந்து வருகிறார்கள் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர் சிவ.கலைமணி அம்பலம், வாரிசுதாரர்கள் கே.செல்வராஜ், கண்ணதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.