June 8, 2025
தென்கரை பேரூராட்சி தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வாழ்த்து:

தென்கரை பேரூராட்சி தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வாழ்த்து:

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், மன்ற உறுப்பினர்களான 15 வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டும், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டும், குறிப்பாக அம்ருத் 2.0 திட்டத்தின் மூலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொடுத்தமைக்கும், வார்டு பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி,பொது கழிப்பிடம், தெருவிளக்கு, மின் கம்பம் மாற்றியமைத்தல் , புதிய ரேஷன் கடை உள்ளிட்ட பணியினை மேற்கொண்டு மக்களின் நலனில் அக்கரை கொண்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை விரைந்து செய்து கொடுத்து, தென்கரை பேரூராட்சி பகுதியை தன்னிறைவு பெற்ற பகுதியாக மாற்றிடும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு, மக்கள் போற்றும் தலைவராக இருந்து வரும் தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ் அவர்களுக்கு 15 வார்டு கவுன்சிலர்களும், பொதுமக்களும் நன்றி கூறி வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.