
திருச்சி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு ட்ரொன் பறக்க தடை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (21.01.2025) சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார்.
மேலும், திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக சிவகங்கை மாவட்டத்திற்கு செல்லவுள்ளதால் பாதுகாப்பு காரணம் கருதி இன்று, நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
20.01.2025 முதல் 21.01.2025 வரை தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.