
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜரானார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு திண்டுக்கல் மணிக்கூண்டில் மக்கள் நல கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் பேசியதாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை இன்று நடுவர் நீதிமன்றம் 1-ல் நடைபெற்றது. வழக்கினை நீதிபதி சௌமியா மேத்யூ விசாரணை செய்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் பேசியதாகவும் காவல்துறையினர் வந்து நிறுத்த சொன்ன போது அவர்களை எதிர்த்து மிரட்டியதாக நீதியரசர் கேள்வி கேட்டவுடன் இல்லை என மறுப்பு தெரிவித்தார். அதன் பின்னர் வழக்கை வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ஒத்திவைத்தார்.
பின்னர் வைகோ செய்தியாளுக்கு அளித்த பேட்டியில், சீமான் பிரபாகரனுடன் மார்பிங் செய்து போட்டோ வெளியிடுவதாக தற்பொழுது வந்த செய்தி குறித்து கேட்ட கேள்விக்கு, ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். தற்போது அது குறித்து கூற விரும்பவில்லை என்றும் விஜயின் அரசியல் குறித்து கேட்ட கேள்விக்கு, ஜனநாயகம் நெருக்கடியில் இருக்கிறது. பிரதமர் மோடி ஜனநாயகத்தை விடுவாரா அல்லது சர்வாதிகாரத்தில் ஒரே நாடு ஒரே குடி ஒரே தேர்தல் என்று புல்டோசர் வைத்து நசுக்குவது போல டாக்டர் அம்பேத்கர் வழங்கிய அரசியல் கார்ப்பரியங்களுக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் இதற்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் வாஜ்பாய் இறந்த பொழுது காஷ்மீரை அட்டவணையில் சேர்க்கவில்லை. இப்பொழுது அவர்கள் காஷ்மீரில் துண்டு துண்டாக்கி விட்டார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கொடி ஒரே மொழி என்று ஹிந்தியில் சமஸ்கிருதம் மட்டுமே என சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியாவை கொண்டு செல்ல முயற்சிக்கிறார். அதில் படுதோல்வி அடைவார் மோடியின் சர்வதிகார கனவு பலிக்காது என்று வைகோ கூறினார்.