
ம் ஜி ஆர் 108 வது பிறந்தநாள் விழா: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க தமிழக முன்னாள் முதலமைச்சர், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் 108 வந்து பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்டம் பெரியகுளம் வடக்கு நகர் கழகம் சார்பில் கழக அமைப்புச் செயலாளர் மரு. கதிர்காமு அறிவுறுத்தலின் படி,மாவட்ட கழக செயலாளர் காசிமாயன் வழகாட்டுதலின் படி,பெரியகுளம் வடகரை சௌராஷ்ட்ரா சத்திரம் அருகே உள்ள எம்ஜிஆர் மன்றத்தில் அறிய வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் அவர்களது திரு உருவப்படத்திற்கு வடக்கு நகர் கழகச் செயலாளர் கே. எஸ். குபேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் அறிவு கொடி ரத்தினவேல்.மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அபுதாஹிர்,பெரியகுளம் வடக்கு நகர் கழக துணை செயலாளர் தினேஷ்,நகர் கழக அவை தலைவர் மோகன், ஜீவானந்தம்,நகர் மன்ற உறுப்பினர்கள் மணி வெங்கடேசன், பால்பாண்டி, வழக்கறிஞர்கள் கே.ஜி.பாலாஜி. சதீஸ், அம்மா பேரவை மாவட்ட தலைவர் மாஞ் சோலை செல்வம், மாவட்ட துணை தலைவர்கள் துரைமுருகன், வி.டி.பி. தர்மலிங்கம், சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி பெரிய தம்பி, முருகேஸ்வரி கார்த்திக், வார்டு செயலாளர்கள், ஆசைத்தம்பி, அழகுமலை, திலகராம்,உட்பட மாவட்ட , நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.