
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 108 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கழக பொதுசெயலாளர் விகே.சசிகலா அவர்களின் ஆணைக்கிணங்க புரட்சித்தாய் மக்கள் முன்னேற்ற கழகம் மாநிலத் தலைவர் சேர சோழ பாண்டியன் ஆலோசனைப்படி மாநில பொதுச் செயலாளர் வெங்கடேசன் முன்னிலையில் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கொரட்டியில் மாவட்டச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் திருத்தணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞர் முன்னாள் சட்டமன்ற கொரடா பிஎம். நரசிம்மன் அவர்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி அறுசுவை உணவு பிரியாணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் புறநகர் மாவட்ட சிறுபான்மை செயலாளர் ஜாவித் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் திருப்பத்தூர் மாவட்டம் ஒன்றிய செயலாளர் ரவி மாவட்ட இணை செயலாளர்கள் சக்திவேல் சாந்தி மாவட்ட துணை செயலாளர் சின்னு மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆனந்தன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்கள் உஷா சதீஷ்குமார் ஒன்றிய பொருளாளர்கள் பாண்டியன் வடிவேலு ஒன்றிய இணைச் செயலாளர் மோகன் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஜெயவேலு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சாதிக் பாஷா அண்ணாமலை மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.