
சாலை பாதுகாப்பு வைரவிழா
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரை சாலை மார்க்கமாக வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நாடார் மஹாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகளும், கல்லூரி ஆசிரியர்களும் பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியை, இளமாறன் மற்றும் செல்வின் காவல் உதவி ஆய்வாளர்கள் துவக்கி வைத்தனர். மேலும் ,தங்கமணி காவல் ஆய்வாளர் மற்றும் அழகர், பூர்ண கிருஷ்ணன் காவல் ஆய்வாளர் தெற்கு போக்குவரத்து காவல் நிலையம் எஸ். ஐ சந்தான குமார் ,சிதம்பரம், லிங்ஸ்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.