
மீண்டும் மீண்டும் ஏமாறாதே தமிழா.
NEETஐ ஒழிப்போம் என்றான்..
ஏமாந்தோம்.
சாராயத்தை ஒழிப்போம் என்றான்… சரக்கு விற்பனைக்கு இலக்கு வைத்து விற்கிறான் ஏமாந்தோம்..
தைரியமாக உங்கள் நகைகளை அடகு வையுங்கள்.. நாங்கள் மீட்டுத்தருகிறோம் என்றான்.
ஏமாந்தோம்.
விலைவாசியை குறைப்போம் என்றான்..
பத்திரப்பதிவு துறை மின்சாரத்துறை கட்டணங்கள் கழுத்தை நெறிக்கும் அளவு உயர்த்திவிட்டான். ஏமாந்தோம்..
அனைத்து குடும்பத்தலைவிக்கும் மாதம் ஆயிரம் என்றான்..
பின் “தகுதி ..தராதரம்.. என்று பிரித்தான் ஏமாந்தோம்..
பறித்தான் பறித்தான் தாலிக்கு தங்கத்தை பறித்தான்..
மாணவர்களின் மடிக்கணினியை பறித்தான்
சைக்கிளை பறித்தான்…
இழந்தோம்..
ஏமாந்தோம்.
கடவுள் நம்பிக்கை இல்லை என்றான்..
பின்பு நான் ஒரு கிறிஸ்தவன் என்கிறான்.
ஏமாந்தோம்..
சமூகநீதி காவலர்கள் நாங்கள் தான் என்றான்.. பட்டியல் சமூகத்தினர் பொதுதொகுதியில் போட்டியிட உரிமையில்லை என்கிறான்.
ஏமாந்தோம்..
தமிழர்களின் காவலன் நான்தான் என்றான்..
என் தொப்புள் கொடி உறவுகள் லட்சக்கணக்கில் மடிந்தபோது கொன்றவனுடன் கூட்டணி வைத்தான்
இன்னமும்
இருக்கிறான்.. ஏமாந்தோம்