June 9, 2025
நியாய விலைக்கடைகளில் அரிசி கிடைக்கவில்லை யாம்

நியாய விலைக்கடைகளில் அரிசி கிடைக்கவில்லை யாம்

அரிசி, பரும்பு, எண்ணெய், சர்க்கரை” – என தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நியாய விலைக்கடைகளில் பல இடங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், மதுரை மத்திய தொகுதியான அமைச்சர் பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராசன் அவர்களின் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திடீர் நகர், ஆர்.எம்.எஸ்., நியாயவிலைக் கடையில் பொதுமக்களை அலைக்கழிப்பு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த கடையின் செயல்பாடு குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினால், முறையாக அரிசி, பருப்புகளை கொடுக்காமல் மேலும் அலைக்கழிப்பு செய்தி அவதூறுகள் பேசுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, இது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரடியாக ஆய்வு ஊழியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.