
குமரி தமிழறிஞர்கள் கௌரவிக்க படாதது வருத்தமளிக்கிறதுஅகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வேதனை.
நாகர்கோவில்: ஜனவரி 01 (2025)
திருவள்ளுவர் சிலையின் 25- வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி கன்னியாகுமரியில் டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் விமர்சையாக கொண்டாட பட்டது. கடந்த திங்கட்கிழமை மாலையில் திருவள்ளுவர் சிலையில் இருந்து விவேகானந்தர் பாறை வரைக்கும் நடந்து செல்லும் விதத்தில் 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நேற்று டிசம்பர் 31 -ந்தேதி திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,” திருவள்ளுவர் சிலையை காண்பதற்காக சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மூன்று புதிய படகுகள் வாங்கப்படும் என்றும், அவற்றுக்கு காமராஜர், நேசமணி, ஜி.யு. போப் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கடைசி வாரம் திருக்குறள் வாரமாகவும் கொண்டாடப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த அறிவிப்பு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது.
அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனத்தலைவர் முத்துக்குமார், குறளகம் நிறுவனர் தமிழ்க் குழவி, திருக்குறள் மன்றத்தை சேர்ந்த திரவியம் மற்றும் ராதாகிருஷ்ணன் உட்பட பலரும் நம்மிடம் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.
மேலும் இது குறித்து அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் கூறியதாவது:-
” குறுகிய கால அவகாசத்தில் துரிதமாக கண்ணாடி இழை பாலம் அமைக்க பட்டு, திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா அன்று திறக்கவும் பட்டிருக்கிறது. இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதனை கண்டு மகிழ்வதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு வசதியாக மூன்று புதிய படகுகளையும் வாங்க போவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். இதுவும் மகிழ்ச்சியான அறிவிப்புதான். இருந்தாலும் திருக்குறளை முன்னிறுத்தி மாணவ- மாணவியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தி வரும் தமிழறிஞர் தமிழ்க்குழவி, கவிமணி மன்றம், தமிழ் மன்றங்கள் நடத்தி வரும் தமிழறிஞர்கள் யாரும் விழாவில் கௌரவிக்க படாதது பெரும் வருத்தத்தை அளிக்கிறது ” . இவ்வாறு அவர் கூறினார்.