
மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயத்தில் பிரதோஷ விழா:
மதுரை சாத்தமங்கலம் ஆவின் பாலவிநாயகர் ஆலயத்தில், சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள சுவாமி மற்றும் அம்பாளுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதை அடுத்து, சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை அடுத்து, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் பட்டர் ஈஸ்வர சிவாச்சாரியார், ஆவின் பால விநாயகர் ஆலய நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.