
தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் 51ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தாராபுரம் பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கா.சாதிக்பாட்ஷா , தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சு.ராஜேந்திரன் , தாராபுரம் தொகுதி விவசாய அணி பொறுப்பாளர் நா.சேனாபதி , தாராபுரம் ஒன்றிய அமைப்பாளர் ரா.சீனிவாசன் , தாராபுரம் நகர அமைப்பாளர் வீ.பாலசுப்பிரமணியம் , திருப்பூர் மாவட்ட ஊடகப்பரிவு பொறுப்பாளர் து.கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.






