June 9, 2025
எவ்வளவோ பாடல் பாடினாலும் "வராரு வாராரு கள்ளழகரு " என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானேன். இதற்காக கேப்டன் விஜய காந்திற்கு கடமை பட்டுள்ளேன் இசையமைப்பாளர் தேவா பேட்டி.

எவ்வளவோ பாடல் பாடினாலும் "வராரு வாராரு கள்ளழகரு " என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானேன். இதற்காக கேப்டன் விஜய காந்திற்கு கடமை பட்டுள்ளேன் இசையமைப்பாளர் தேவா பேட்டி.

மதுரையில் இசை அமைப்பாளர் தேவா Live in concert நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி
18ஆம் தேதி ஒத்தக்கடை அருகே உள்ள வேலம்மாள் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக, மதுரை சுற்றுச்சாலை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் தேவா கூறுகையில்:
“மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது எனது பாடல் “வராரு வராரு அழகர் வாராரு என்ற பாடல்” ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அதனை நான் முதல்
முறையாக மதுரை மண்ணில் பாட இருக்கிறேன். இதற்கான வாய்ப்பை கேப்டன் விஜயகாந்த் எனக்கு அளித்தார். அவருக்கு எனது, நன்றியை தெரிவிக்கிறேன்.

இந்த இசைக் கச்சேரியில் 60 க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் கொண்ட இசைக் குழுவினருடன் இணைந்து நடத்த உள்ளேன். பாடகர் மனோ, அனுராதா ஸ்ரீராம், அஜய் கிருஷ்ணா, சபேஸ், முரளி, ஸ்ரீ காந்த் தேவா உள்ளிட்டோருடன் நானும் கலந்து கொள்கின்றேன்.

வரும் ஜனவரி 18ம் தேதி அன்று 5 முதல் 6 மணி நேரம் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. தற்போது உள்ள இசையமைப்பாளர்களின் இசையைவிட இளையராசா உங்களது (தேவா) இசை காலம் கடந்து ஒலிப்பது குறித்த கேள்விக்கு? காலம் கடந்து எனது இசையும், ராஜா இசையும் இருப்பதற்கு மிகப்பெரிய பாக்கியம் செய்திருக்கின்றேன்.

தற்போதய இசையமைப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர் யார்?
எனக்கு அனிருத் இசை ரொம்ப பிடிக்கும் அவர் லேட்டஸ்ட்டாகவும் ஆக ஸ்பீடாகவும் இருக்கிறார். பல இசையமைப்பாளர்கள் இசையுடன் நடித்து வருவது பற்றி ? தாங்கள் நடிப்பீர்களா? எனக்கு நடிக்க நிறைய படங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. பண்ண விருப்பமில்லை. மூக்குத்தி அம்மன், எல். கே.ஜி. ராயன் உள்ளிட்ட பல படங்களில் அழைப்பு வந்தது.

இசை வொர்க் டைட்டாக இருப்பதால் நடிக்க விரும்பவில்லை. தற்போது இருக்கக்கூடிய இசையமைப்பாளர்களுக்கு இசை பிடிக்கவில்லை என்றால், தலைமுறை இடைவெளி இருக்கிறது என்று தான் அர்த்தம். எனக்கு அனைவரின் இசையும் பிடிக்கத்தான் செய்கிறது. பல்வேறு படங்களில் இசையமைப்பாளர்களின் இசை வேறு சில படங்களை தழுவி இருப்பதாக குற்றச்சாட்டு குறித்தது? கந்த சஷ்டி கவசம் பாடல் சூரியன் படத்தில் 18 வயதில் பாடலைப்போல சேர்த்து இசையமைத்தேன் செய்தேன் கதைக்கு ஏற்ற போது சேர்க்கப்படுகிறது.

ஆனால், அதை காப்பி அடித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. கதையின் தேவையை பொருத்து இயக்குனர் தயாரிப்பாளர் சில குறிப்பிட்ட இசை தங்கள் பாடல்களில் இடம்பெற வேண்டும் என, கூறி வருகின்றனர். அது, காப்பியடிப்
பதாக கூற முடியாது.

அதேபோல், இந்த இசையை நான் அமைக்க முடியாது என கூறவும் முடியாது.
ஹைதராபாத்தில் புஸ்பா-2 படத்தின் போது அல்லு அர்ஜூனை காண சென்ற
போது, கூட்ட நெரிசலில் பெண் மற்றும் சிறுமி உயிர் இழந்த விவகாரத்தில் நடிகரின் மீது நடவடிக்கை எடுத்திருப்பது துரதிஷ்ட வசமானது. அது குறித்து எனக்கு தெரியாது என்றார்.

இதேபோன்று பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன. இதில், நடிகரை குற்றம் சொல்ல முடியாது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இசைய மைப்பாளர் இளையராஜாவிற்கு அவமரியாதையா என்ற கேள்விக்கு? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இசைய
மைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த விதமான அவமதிப்பும் நடைபெறவில்லை.
அதனை அவரும் கூறியிருக்கிறார். அனைத்து மரியாதையும் கொடுக்கப் பட்டதை நான் தொலைக்காட்சி வாயிலாக பார்த்தேன்.

இப்போது உள்ள இளம் இசை அமைப்பாளர்கள் நன்றாக இசை அமைக்கின்றார்கள். அவர்களுக்கு கூறுவதற்கு எதுவும் கிடையாது. ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இளம் இசையமைப்பாளர்கள் பணத்தை சேமித்து வைத்து வரும் காலத்திற்கு தேவையானவற்றை சேமிக்க வேண்டும். பழைய பாடல்கள் இன்றும் கேட்க இனிமையாக உள்ளதே? எனது, பாடல் 35 ஆண்டுகளுக்கு பிறகும் தற்பொழுதும் திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவது எனக்கு கிடைத்த பாக்கியமாக நான் கருதுகிறேன். மீண்டும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விருப்பப்படுகிறேன். அந்த ஆதங்கமும் எனக்கு இருக்கிறது. அதற்காக காத்திருக்கிறேன்”, என இசையமைப்பாளர் தேவா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.