
ரயில்வே துறைக்கு மும்பை தமிழரின் ஆதங்கக் கடிதம்
ஏன் ரயில்வே துறை தொடர்ந்து தமிழ்நாட்டை தமிழ் மக்களை புறக்கணிக்கிறது ??..
மும்பை வர்த்தக நகர்த்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஏன் கூடுதல் ரயில் விடப்படுவதில்லை ??..
இந்துமத பண்டிகையோ இஸ்லாமிய கிறிஸ்துவமதப்பண்டிகைக்கோ தமிழர் பண்டிகைக்கோ கோடைவிடுமுறைக்கோ சிறப்பு ரயில் விடுவதில்லை கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, விளையாட்டு,மருத்துவம், சுற்றலானு நன்கு வளர்ச்சி அடைந்த மாநிலம் ஏன் ரயில்வே துறைக்கு பெட்டிகளை தயாரித்து தருவது பெட் ஷீட்களை போர்வைகளை சுத்தம் செய்து தருவது க்கூட தமிழ்நாடுதான் இப்படி சிறப்பு க்கொண்ட தமிழ்நாடுக்கு சிறப்பு ரயிலோ கூடுதல் ரயிலோ விடுவதில்லை 50 வருடத்திற்கு மேல் மக்களின் வரவேற்பை பெற்று இயங்கிய மும்பை – கன்னியாகுமரி ரயிலை கொரோனாவுக்கு பின் மும்பைக்கு பதில் புனே க்கு இயக்குகிறார்கள். தமிழ்நாட்டுக்கு மக்கள் மும்பைக்கு வரக்கூடாது புனேயிலேயே இருக்கவும் னு சொல்கிறீர்களா ??.
மும்பை -நாகர்கோயில் ரயிலில் சுத்தம் ,சுகாதாரமே கிடையாது. ஸ்வாட்ச் பாரத் க்கு வரிசெலுத்துவதுடன் டிக்கெட் எடுத்து பயணிக்கும் பயணிகள் சுத்தம் ,சுகாதாரம் இல்லாத ரயிலில் பயணிக்கணுமா ??.ஒருமுறை ரயில்வே உயரதிகாரிகள், ரயில்வே அமைச்சர்கள் இந்த ரயிலில் பயணித்தால் எங்கள் வலி தெரியும் .
இந்த பிரச்சனைகளை களைய பல முறை பல அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துவிட்டோம் பலன் இல்லை .. மத்திய ரயில்வே ரயில்வே போர்டு க்கு கூடுதலான அழுத்தம் நெருக்கடி கொடுத்தால் மட்டுமே இயங்குவார்கள் என தெரிகிறது. தமிழ்நாடு எம் பி ,கேரளா எம் பி ,மும்பை எம் பி, எம் எல் ஏ என பலர் மத்திய ரயில்வே, தென்னக ரயில்வே ,ரயில்வே போர்டு சேர்மேன் மற்றும் ரயில்வே அமைச்சரை சந்தித்தாச்சு பல மனுக்கள் கொடுத்தாச்சு.. ஜனாதிபதிக்கும் மனு கொடுத்தாச்சு ..
இனிமேல் யாரிடம் மனு கொடுக்க? பிரதமரிடமா, அம்பானியிடமா, அதானிடமா, ஐ.நா விடமா ??.
பெட்டி இல்லை, waiting list குறைவு இருக்குனு தட்டிக்கழிக்கிறாங்க.
தமிழ்நாட்டுக்கு மட்டும் பெட்டி இல்லையா ?? ..Operational Issues ??.
நாங்க waiting list WL/20 இருந்தால் டிக்கெட் எடுக்க மாட்டோம் . Tatkal/Premium Tatkal தட்கல் போட்டு போவோம். தட்கல் போட்டும் கிடைப்பதில்லை waiting list Ticket எடுத்து அதிகாரிகள் சொன்னர்கள்னு Reservation Compartment & Bathroom ல உட்கார்ந்து போகவா ??..
நீங்க தமிழ்நாடு மக்களை திட்டமிட்டு புறக்கணக்கிறேங்க னு கடுமையாக சொல்லியாச்சு..
இனிமேல் ஆர்பாட்டம்தான் பண்ணனும்னு கூட சொல்லியாச்சு.. ஆர்ப்பாட்டம் பண்ணால் கைது செய்து வார்கள் னு பதில் சொல்கிறார்கள்..
ஒன்றுபிரச்னையிலை மக்களுக்குத்தான் பண்ணுகிறோம். நாங்க பார்த்துக்கொள்கிறோம் இனிமேல் என்ன பண்ண ??..
ரயில்வே துறையை மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு ஒப்படைக்கணும் இல்லை .
இதை சொல்லக்கூடாது ரயில்வேயே தனியாருக்கு விற்றால் அவன் லாபநோக்கத்தில் இயக்குவான்.
அதிகமான கட்டணத்தில் ரயிலை தமிழ்நாட்டுக்கு இயக்குவான் அப்படியாவது மக்கள் வசதிக்குக்கேற்ப போகட்டும்
மக்களுக்கு பயனில்லாத ரயில்வே துறை அரசிடம் இருந்தால் என்ன ??..இல்லையென்றால் என்ன ??.. தனியார் துறையிடம் போனால் தண்ணீர் வசதியுடன் சுத்தமான கழிப்பிடம், பெட்டிகள்,
நவீனமயமாக்களுடன் ரயில் மற்றும் ரயில் நிலையம், டிக்கெட் இல்லாத பயணிகள் தொந்தரவு இருக்காது, அதிகாரிகள் சம்பளத்திற்கு வேலை செய்வார்கள்.. கூட்டம் உள்ள பகுதிக்கு ரயில் தர மாட்டேன் என்று புறக்கணித்தால் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் ..என்ன ??. கூட்டம் லாபம் இல்லையென்றால் ரயில் விட மாட்டான்.
மக்களே ரயில்வே துறையை புறக்கணிக்கிற சூழலுக்கு தள்ளாதீர்கள் என ரயில்வே அதிகாரிகளை வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு இந்தியாவில் தமிழ்நாடு இருப்பதாக தமிழ்நாட்டையும் சமஉரிமையுடன் நடத்துவதாக நம்பவைக்கப்பட்டுள்ள மும்பை வாழ் தமிழரான சிறீதர் தமிழன்.