
கந்தர்வகோட்டை அருகே தேசிய கணித தினம் கடைபிடிப்பு.
கந்தர்வகோட்டை டிச 21
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் வானவில் மன்றத்தின் சார்பில் தேசிய கணித தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை கணிதத்தின் அடிப்படை கோட்பாடுகள் குறித்து பேசினார்.

கந்தர்வக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா தேசிய கணித தினம் குறித்து பேசும் பொழுது ராமானுஜம் கண்டுபிடித்த கணிதத்தின் ஆழ் உண்மைகள் தான் இன்றைய ஆன்ராய்ட் யுகத்தின் அனைத்து துறையிலும் பயன்படுகிறது என்பதை மறுக்க முடியாது.
கணித மேதையின் பிறந்த நாளான டிச 22 இளைய தலைமுறை முறையினர் இணையத்திலேயே செலவழிக்காமல் ராமானுஜரின் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் போற்றி, தங்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டும்,
2012-ம் ஆண்டு ராமானுஜரின் 125-வது பிறந்த ஆண்டையொட்டி, அந்த ஆண்டை தேசிய கணித ஆண்டாகவும், அவர் பிறந்த தினமான டிசம்பர் 22-ந்தேதியை தேசிய கணித தினமாகவும் கடைபிடித்து வருகிறோம். அன்று முதல் ஒவ்வொரு டிசம்பர் மாதம் 22-ந்தேதியும் தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது.
ராமானுஜரின் கணக்கு சூத்திரங்கள் மற்றும் குறிப்புகளைப் பார்த்து பல்கலைக்கழக வல்லுனர்கள் வியந்தனர். அதன் பின் இங்கிலாந்து வர அழைப்பு விடுத்தனர். இதன்காரணமாக 1914ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார் ராமானுஜர்.
பல கணித மேதைகளுக்கு மத்தியில் தனது கணக்குத் திறமையை நிரூபித்தார்.
33 ஆண்டுகளே வாழ்ந்த ராமானுஜன், சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இன்றி வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 முதல் 1918-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கணிதத் தேற்றங்களை ராமானுஜன் கண்டுபிடித்தார். அடிப்படை இயற்பியல் முதல் மின்தொடர்புப் பொறியியல் வரை எனப் பல்துறைகளின் உயர்மட்ட ஆய்வில் ராமானுஜனின் சூத்திரங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. ராமானுஜனின் பெயரால் 1997-ல் தொடங்கப்பட்ட த இராமனுஜம் என்ற கணித ஆய்விதழ் இன்றும் வெளியாகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்கணிதம் புதுமை மற்றும் முன்னேற்றத்திற்கான பாலம் என்பதாகும்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் கணிதக் கோட்பாடுகள் எவ்வாறு முன்னேற்றம் அடைகின்றன என்பதை வலியுறுத்துகிறது என்று பேசினார்.
மாணவர்களுக்கு கணித புதிர் கேட்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் பதில் அளித்தனர்.