
திண்டுக்கல்லில் 5வது பன்னாட்டு கல்வியியல் மாநாடு
திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியில் 5வது பன்னாட்டு கல்வியியல் மாநாடு நடைபெற்றது. வியாழனன்று நடைபெற்ற இம்மாநாட்டில் பல்துறை கற்றல், கற்பித்தலில் கணினி தொழில் நுட்ப பயன்பாடுகளும், வாய்ப்புகளும் என்பதை மையக்கருத்தாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது.
காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பஞ்சநதம் தலைமை உரையாற்றினார். இந்நிகழ்வில் ஜி.டி.என். கல்லூரி முதல்வர் முனைவர் சு.சரவணன், வரவேற்று பேசினார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் (பொறுப்பு) பேரா. சுங்கர் தொடக்கவுரையாற்றினார். தஞ்சை தமிழ்; பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பேரா. திருமலை விழா பேரூரையாற்றினார்.
சைவபானு கல்லூரி முதல்வர் செல்லத்தாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
முதல் அமர்வில் முனைவர் பவித்ரா நந்தகுமார் கலந்து கொண்டு தமிழ் மொழி வளர்ச்சியில் கணினி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் இணைய வழி மூலமாக பேசினாhர். 2வது அமர்வில் அருப்புக்கோட்டை சைவபானு சத்திரியக் கல்லூரியின் இணை பேராசிரியர் முனைவர் இரா.தனசுபா பேசினார். 3வது அமர்வில் இணையமும் இதழியலும் என்ற தலைப்பில் தீக்கதிர் செய்தி ஆசிரியர் ப.முருகன் கலந்து கொண்டு பேசினார்.
முத்துக்கமலம் மின்னிதழின் ஆசிரியர் தேனி சுப்ரமணியம் அமர்வுக்கு தலைமை வகித்தார். கேரளா மத்திய பல்கலைக்கழகத்தின் மொழியில் துறை மேனாள் தலைவர் பேரா.எல்.இராமமூர்த்தி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வி மேனாள் இயக்குநர் பேரா.ஜெ.விஜயதுரை, ஆகியோர் மையக்கருத்துரை வழங்கினர். தமிழ் அநிதம் செயலர் (அமெரிக்கா) பேரா.காமாட்சி நன்றி கூறினார். (நநி)
தலைமை நிருபர் : திண்டுக்கல் பாலசிந்தன்