
திருவேடகம் ஊராட்சியில்,சமூக தணிக்கை.
சோழவந்தான், நவம்பர் : 29.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற வளாகத்தில் சமூக தணிக்கை நடைபெற்றது.
கிராம பெரியவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சுதா பிரியா வரவேற்றார். சமூக தணிக்கை அதிகாரி பொன்னடியான் தணிக்கை செய்தார். குழு ஆய்வாளர்கள் தேவி ,மாரி ,பிரியா மாரீஸ்வரி அறிக்கை வாசித்தனர்.
12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள் நல பணியாளர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.






