
ஒரு லட்சம் பனை விதைகள் நடும் விழா
உடுமலை : நவ:01
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோவில் அருகில் உள்ள செங்குளத்தில் மழை உடுமலை அமைப்பின் 175 ஆவது நிகழ்வாக ஒரு லட்சம் பனை விதைகள் நடும் விழா இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது..

நிகழ்வில் வனத்துக்குள் திருப்பூர், டெக் மகேந்திரா நிறுவனம், அரிமா சங்கங்கள், ரோட்டரி சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், உடுமலை இன்னர் வீல் கிளப் ,வாசவி சங்கம், உடுமலை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்,
பிரீமியர் மில் பூலாங்கிணறு அரசு பள்ளி, பொதுப்பணித்துறை, வட்டார வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை தளி வாய்க்கால் வடபூதனத்தும் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் ஜல்லிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பலர் பங்கேற்று பனை விதைகளை நடவு செய்தனர்..







நல்ல நிகழ்ச்சி
நல்ல செய்தி