March 2, 2026
பொன் முனியாண்டி சுவாமிமூன்றாம் ஆண்டு சிறப்பு பூஜை :

பொன் முனியாண்டி சுவாமிமூன்றாம் ஆண்டு சிறப்பு பூஜை :

வாடிப்பட்டி, செப்.21 –

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சித்தாலங்குடி பொன் முனியாண்டி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, மூன்றாமாண்டு சிறப்பு பூஜை நடந்தது.

இந்த பூஜையை ஒட்டி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆராதனை அர்ச்சனைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த சிறப்பு அலங்காரத்தில் பொன் முனியாண்டி சுவாமி அருள் பாலித்தார். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதன் ஏற்பாடுகளை, ஜெயக்குமார் செந்தில் குமார் பூசாரி தினகரன் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *