
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களை சந்தித்து கலைமாமணி கலாராணி வாழ்த்து பெற்றார் :
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் : தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் பொதுக்குழு / நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மாநில கலைப்பிரிவு துணைத் தலைவர் நாட்டுப்புற பாடகர் கலைமாமணி தாராபுரம் சி.கலாராணி அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இவர் தமிழகம் முழுவதும் பல்வேறு நாட்டுப்புற கலைஞர்களை உறுவாக்கி அவர்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கவும் நலிவடைந்த கலைஞர்களுக்கு அரசு உதவி வழங்கிடவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் இதில் பலரும் பயனடைந்து வருகின்றனர்.
பாராட்டு சான்றிதழ் பெற்றதற்கு அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலைமாமணி கலாராணி அவர்களை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.






