
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் 80 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக திறக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் பாரதி நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் புதியதாக 80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நிலையில் இன்று இராமேஸ்வரம் நகர் மன்றதலைவர் கே.இ.நாசர்கான், குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
விழாவில் துணை தலைவர் பிச்சை என்ற தட்சிணாமூர்த்தி, அரசு மருத்துவர் சத்தியமூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர்கள் சத்யா,பிரபு, JRM.K.முருகன் மேலும் அரசுஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






