March 2, 2026
வனத்துறை அனுமதி இல்லாமல் தார் சாலை அமைக்க வெங்கடேசன் எம் எல் ஏ பூமி பூஜை காடுபட்டி ஊராட்சி வடகாடுபட்டியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் அவலம்:

வனத்துறை அனுமதி இல்லாமல் தார் சாலை அமைக்க வெங்கடேசன் எம் எல் ஏ பூமி பூஜை காடுபட்டி ஊராட்சி வடகாடுபட்டியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் அவலம்:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடு பட்டியில் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க வருவாய்த்துறை நெடுஞ்சாலைத்துறை வனத்துறை ஆகியோர் இணைந்து அனுமதி அளிக்க வேண்டிய நிலையில் கடந்த ஆண்டு வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் தார் சாலை அமையக்கூடிய இடத்தை பார்வையிட்டு வனத்துறை மற்றும் வருவாய் துறை நெடுஞ்சாலை துறை ஆகியோரிடன் முறையாக அனுமதி பெற்று உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிச் சென்றார் .

இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த சோழவந்தான் வெங்கடேசன் எம். எல். ஏ. வனத்துறை அனுமதி பெற்று, விட்டதாக கூறி தார் சாலை அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 50 ஆண்டு பொதுமக்களின் கனவு நிறைவேறி விட்டதாக கூறி சென்றார்.

இந்த நிலையில், பணிகளை தொடங்க நெடுஞ்சாலை துறையினர் முற்பட்டபோது அதற்கு வனத்துறை சார்பில் இன்னும் அனுமதி வழங்கவில்லை எனக் கூறி தார்சாலை அமைக்க வனத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்த சோழவந்தான் வெங்கடேசன் எம். எல். ஏ. சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் தார் சாலை அமைக்க பூமி பூஜை போட்டு பணிகள் தொடங்கப் போவதாகவும் ஆகையால் இதற்கு இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கூறியதாக கூறப்படுகிறது .

ஆனால், வனத்துறை அனுமதி இல்லாமல் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் தார் சாலை அமைக்க அனுமதிக்க முடியாத என வனத்துறை தரப்பில் கூறியதாக கூறப்படுகிறது .
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் பூமி பூஜை போடப்பட்டும் தார் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படாமல் வெங்கடேசன் எம். எல். ஏ. கிளம்பிச்சென்றார்.

இது குறித்து , அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் இன்னும் 6 மாதத்தில் தேர்தல் வரக்கூடிய நிலையில் தேர்தல் வாக்குறுதிக்காக வெங்கடேசன் எம் .எல். ஏ. இந்த சாலை அமைக்கப்படும் என பூமி பூஜை போட்டு சென்று விட்டார் .

ஆனால், அதற்கான ஆக்கப்பூர்வமாக மற்ற துறைகளின் அனுமதியை பெற தவறியதால் தற்போது வனத்துறையினர் சாலை அமைக்க அனுமதி மறுத்து வருகின்றனர். ஆகையால்,
பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் இதில் தலையிட்டு எங்களின் 50 ஆண்டு கோரிக்கையான வடகாடுபட்டி பகுதிக்கு உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர் .

மேலும் , இதுகுறித்து, விரைவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப் போவதாகவும் அமைச்சர் மூர்த்தி அவர்களை கிராமப் பொதுமக்கள் சார்பில் நேரில் சந்திக்க இருப்பதாகவும் முடியாத பட்சத்தில் பொதுமக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் செய்யப் போவதாகவும் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *