
நிலக்கோட்டையில் இருந்து நாகர்கோவிலுக்கு 8 அடி உயரத்தில் 4 லட்சம் மதிப்பில் பிரம்மாண்ட உலர் பழங்களால் மாலை பூ வியாபாரிகள் திரண்டு ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்
நிலக்கோட்டை, ஆக.29 –
நாகர்கோவில் மாவட்டம், கீழவண்ணான் வினை , சரக்கல் விளை உள்ள அருள்மிகு பிரம்ம சக்தி அம்மனும், சுடலைமாட சுவாமியுடன் இசக்கி அம்மனும் கூடிய வன்னியடி மறச்சுவாமி திருக்கோயில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் 13 ஆம் தேதி இன்று 29.8 .2025, 30. 8. 2025 ஆகிய 2 தினங்கள் கொடை விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவிற்கு சத்தியசீலன், சத்தியரூபன் இருவரும் தனது குலசாமிக்கு மாலை நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அதன்படி சற்று சுவாமிக்கு வித்தியாசமாக மாலை அணிய முடிவு செய்தனர். அதன்படி சத்தியசீலன், சத்திய ரூபன் ஆகிய இருவரும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் ஆத்தூர் தாலுகா மல்லையா புரத்தைச் சேர்ந்த முருகன் வயது 35. இவர் பூ மார்க்கெட்டில் பூக்கட்டும் தொழிலை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் செய்து வரும் மாலையை சிறப்பாக செய்து தர முருகனை சந்தித்து பேசினர்.
அதன்படி முருகனிடம் சற்று வித்தியாசமாக உலர் பழங்களால் மாலை செய்து தர ஆர்டர் கொடுத்தனர். அதன்படி ஆர்டர் எடுத்த முருகன் உலர் பழங்களான செர்ரி பழம், கிஸ்மஸ் பழம், ஏலக்காய், மக்கானா என்று சொல்லக்கூடிய தாமரைப் பூ விதை, ஆகிய உலர் பழங்களை வைத்து சுமார் 4 லட்சம் மதிப்பில் பிரம்மாண்டமான மாலை தயார் செய்யப்பட்டது.
இந்த மாலை தயார் செய்வதற்கு கடந்த 8 நாட்களாக நிலக்கோட்டை பூ மார்க்கெட் தொழிலாளர்கள் முருகன் தலைமையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு மாலைகளை தயார் செய்தனர். அதன்படி மாலைகள் தயாரான பின்பு நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் ஒரு வண்டியில் ஏற்றி மிகவும் பாதுகாப்பாக நாகர்கோயில் கீழ வண்ணான் விளை பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
குலசாமிக்கு படைப்பதற்காக ஏலக்காய் மற்றும் உலர் பழங்களால் மிகுந்த பிரம்மாண்டமான மாலை தயாரித்து நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் வைத்ததைப் பார்க்க பூ வியாபாரிகளும், பொதுமக்களும் பிரமித்துப் பார்த்தனர். இது போன்ற மாலைகளை தொடர்ந்து செய்து தரத் தயாராக இருப்பதாக நிலக்கோட்டை பூ மார்க்கெட் பூ மாலை கட்டும் தொழிலாளி முருகன் தெரிவித்தார்.






