
உடுமலை அருகே பைபாஸ் சாலை தடுப்பில் மோதியதில் கார் விபத்து.!
திருப்பூர் மாவட்டம் , உடுமலை அடுத்துள்ள ராஜாவூர் பிரிவு அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலையில், பணிகள் நடைபெறும் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்புகளில் போதிய விழிப்புணர்வு பதாகை இருந்தாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






