
ஸ்ரீபெரும்புதூரில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில்குறுவட்ட அளவிலானவிளையாட்டுப் போட்டி
ஸ்ரீபெரும்புதூர் ஆகஸ்ட் : 11
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தெரேசாபுரம் குறுமலர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் குடியரசு தின விழா மற்றும் பாரதியார் பிறந்த தின விழா குறுவட்டம் அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் சிலம்பம், கடற்கரை கைப்பந்து, வளைய பந்து உள்ளிட்ட விளையாட்டு களில் 33 பள்ளிகளைச் சார்ந்த சுமார் 368 மாணவ மாணவியர்கள் இப்போட்டியில் பங்கு பெற்றனர்,
உடற்கல்வி இயக்குனர் சிவக்குமார் தலைமையில், குறுமலர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தம் துவக்கி வைத்தார். மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் : சோமசுந்தரம் கோமளா, சரிதா ,அனிதா, பாண்டியன், எட்வின் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர் .






