
சர்வதேச தனித்து வாழும் மகளிர் தினம்
சர்வதேச தனித்து வாழும் மகளிர் தினத்தை முன்னிட்டு இராசிங்காபுரம் சுவீட் டிரஸ்ட் மற்றும் சிறகுகள் கூட்டமைப்புடன் இணைந்து தனித்துவாழும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், மற்றும் சட்டத்தீர்வுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ரேணுகா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மேனேஜிங் டிரஸ்டி சித்ரா வரவேற்புரை யாற்றினார். பூந்தளிர் மகளிர் கூட்டமைப்பு செயலாளர் ராதிகா முன்னிலை வகித்தார்.மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் பாண்டி நேசம் தொண்டு நிறுவனம் நிறுவனர் முருகன், சுவீட் டிரஸ்ட் இயக்குனர் நாகராஜன், ஆகியோர் கருத்துரை வழங்கினர்,ஒருங்கிணைப்பாளர் கயல்விழி நன்று உரையாற்றினார். இக்கூட்டத்தில். பல்வேறு கிராமங்களை சார்ந்த தனித்துவாழும் பெண் பிரதிநிதிகள் சுமார் 25 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.