
ஸ்லீப்பர் செல் அண்ணாமலை.
அண்ணாமலை திமுகவின் ஸ்லீப்பர் செல். முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்.
அண்ணாமலை திமுகவின் ஸ்லீப்பர் செல், இவர் அதிமுக பாஜக கூட்டணியை உடைக்க பார்க்கிறார் என முன்னாள் காவல் துறை அதிகாரி வரதராஜன் பேட்டி அளித்துள்ளார்.
அவரது பேட்டியில், அண்ணாமலை அதிமுக பாஜக கூட்டணியை கெடுக்க பார்க்கிறார், இவர் திமுகவின் ஸ்லீப்பர் செல், அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு சொல்கிறேன், மனசாட்சிப்படி பண்ணுங்க, உங்களுக்கு ஒரு தலைவர் அப்படின்னா கண்ணை மூடிக்கிட்டு அந்த தலைவர எல்லாம் ஆதரிக்க கூடாது. அவர் நல்லது சொன்னால் வாழ்த்துங்கள், கெட்டது சொன்னா சுட்டி காட்டுங்க..
அண்ணாமலை அதிமுக பிஜேபி கூட்டணியை உடைக்க முயற்சி செய்கிறார்ன்னு சொன்னோம். ரொம்ப பேர் கோவிச்சுக்கிட்டாங்க. ஆனா அண்ணாமலை பாஜாக அதிமுக கூட்டணியை விரும்பல, அண்ணாமலை இல்லாமல் அப்படி ஒரு கூட்டணி அமைவது அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை. எப்படியாவது அந்த கூட்டணியை குழப்பி அதை சிதறடிக்க வேண்டும் என்று கருதுகிறார், அந்த இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து மற்ற கட்சிகளையும் இணைத்து தேர்தலை சந்திக்க கூடாது என்று அவர் நினைக்கிறார் என்று திருமாவளவன் பத்திரிகையாளர்களிடம் பேசி இருக்கிறார்.
அதிமுக பாஜக கூட்டணியை கெடுத்துட்டு திமுக ஆட்சிக்கு வருவதற்கு அண்ணாமலை உதவி செய்கிறார் என்ற கெட்ட பெயர் வந்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல பாஜகவில் இருப்பவர்களும் அதை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்.
அண்ணாமலைக்கு எதிராக டெல்லியில் பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தலில் அண்ணாமலை கோவையில் நிக்கும்போது, கோவையை சேர்ந்த மிகப்பெரிய பிரபலங்கள் கட்சிக்கு நன்கொடை கொடுதார்கள், அது மத்தியில ஆள்கிற கட்சிஇடம் நல்ல பேர் வச்சுக்கணும்னு சொல்லி மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் நன்கொடையா கொடுத்திருக்காங்க. ஆனா அண்ணாமலை அதை வாங்கிக்கிட்டு செலவு பண்ணி இருக்கீங்க.
வானதி சீனிவாசன் உட்பட்ட மத்த தலைவர்கள் எல்லாம் போய் டொனேஷன் கொடுத்தவர்களை கண்டுபிடித்து யார் யாரு எவ்வளவு டொனேஷன் கொடுத்தாங்கன்னு லிஸ்ட் எடுத்து அது கட்சிக்கு வந்து சேரலங்கிற ஆதாரங்களை எடுத்து அமித்ஷாவுக்கு அனுப்பி இருக்காங்க. அமித்ஷா அதை விசாரிச்சு மிகப்பெரிய கோபத்தில் இருக்காரு. அண்ணாமலை திமுககாரன்கிட்ட வாங்குனாரு, மந்திரிகிட்ட வாங்குனாருங்கிற ஒரு குற்றச்சாட்டு என்கிட்ட வருது. அதை பத்தி நான் கவலைப்படல. நம்ம கட்சிக்கு
கொடுத்த அந்த நன்கொடையை அவர் எப்படி எடுக்கலாம்? அது கட்சிக்கு தான வந்து சேரணும். அந்த பணத்தை அண்ணாமலையிடமிருந்து திரும்ப வாங்க வேண்டும் அப்படிங்கிறதுல அமித்ஷா ரொம்ப உறுதியாக இருக்கிறார். அப்படிங்கிற செய்தி வந்திருக்கு.
அதனால அண்ணாமலை தயவுசெய்து இந்த கூட்டணியை பத்தி பேசாதீங்க கூட்டணி கெடுக்காதீங்க அது நாட்டுக்கு நல்லதல்ல. ஒருவர் தப்பு தப்பா பேசுனா நாங்க சுட்டிக்காட்டதான் செய்வோம், நான் நீதித்துறையில் இருக்கேன் என்னுடைய சொந்த உழைப்பில நான் சம்பாதிச்சுிட்டு இருக்கேன் அரசியல்வாதிகள் மாதிரி மற்றவன் பணத்தை போய் நாங்க கொள்ளை அடிக்கிற ஆளுங்க கிடையாது. சுய உழைப்பில சம்பாதித்து கொண்டிருக்கிறோம். நேர்வழியில சம்பாதிச்சுிட்டு இருக்கோம். தப்பான வழியில எல்லாம் நாங்க சம்பாதிக்கல, திமுகவை சேர்ந்தவர்களை நீங்கள் பாராட்டி பேசும் போதுதான் எனக்கு அண்ணாமலை மேல கோபம் வருகிறது. அப்படில்லாம் பேசும்போது உங்களை நாங்கள் எதிரியாக பார்க்கிறோம். இல்லாவிட்டால் நீங்கள் எங்களுக்கு எதிரி இல்லையே,
எங்களுக்கு திமுக எதிரி. காரணம் என்ன? திமுகவுக்கும் எங்களுக்கும் பங்காளி சண்டையா? அவர்கள் ஆன்மீகத்துக்கு எதிரானவர்கள். கடவுளை எல்லாம் ஒரு காலத்தில் செருப்பால் அடிச்சான் அப்ப அவன் நமக்கு எதிரிதானே.. தெய்வத்தை கும்பிடும் எங்களை போன்றவர்களுக்கு அவர்கள் எதிரிகள் அதுதான். கொள்கை ரீதியாகத்தான் அவர்களை நாங்கள் எதிர்க்கிறோம். அதுக்கப்புறம் ஊழல் அதனால்தான் அவர்களை போய் யார் ஆதரித்தாலும், அவர்களுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அவர்களும் எங்களுக்கு எதிரி. இது அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் அண்ணாமலை இன்னைக்கு நல்ல விஷயம் சிலவற்றை சொல்லி இருக்கார், ஸ்பெஷல் யூனிட் சிறப்பு அதிகாரிகள்னு மூணு பேர போட்டாங்கல்ல ஹைகோர்ட்ல அவங்க செய்த அயோக்கியத்தனங்கள் எல்லாம் லிஸ்ட் போட்டு காமிச்சிருக்காரு அருமையான விஷயம். இந்த மாதிரி விஷயத்தை கொண்டு வந்து பேசுங்க. அவர்கள் என்ன பண்ணி இருக்காங்கன்னு சொல்றாருன்னா, ஞானசேகரன் மொபைல் போனை எடுக்கறாங்க. அதுல மற்ற பெண்களுடைய ஆபாச வீடியோக்கள் இருக்கு. அப்ப இந்த மூணு அதிகாரிகளும் மனசாட்சி உள்ளவங்களா இருந்தா, உங்களுக்கும் குழந்தைங்க இருக்குல்ல… ஒரு காவல்துறை அதிகாரியா ஒரு கெட்டத பார்த்தா இரத்தம் கொதிக்கணும். அந்த இரத்தம் கொதிக்கவே இல்லையே மூணு பேருத்துக்கும் அப்ப நீங்க அன்பிட். நீங்க எல்லாம் காவல் துறையில இருக்காதீங்க. மனசாட்சி படி ராஜினாமா பண்ணிட்டு வீட்ல போய் வேலைய பாருங்க.
அவர் சொல்றபடி வேறு ஒரு பெண்ணோட ஒரு வீடியோ இருந்தா மனசாட்சி உறுத்த வேணாமா இன்னொரு பெண் பாதிக்கப்பட்டிருக்காளே, இவன் வீடியோ எடுத்து வச்சிருக்கானே, அந்த பெண் சம்பந்தப்பட்டதுல இவனை கைது பண்ணலையே, அப்படின்னு அதை எடுத்து விசாரிச்சு பாதிக்கப்பட்ட அந்த பெண்ணையும் கூப்பிட்டு, அந்த சார் வந்து நிறைய பெண்கள்ட்ட, இவன் வந்து அந்த சாருக்கு நிறைய பெண்களை இதே மாதிரி பண்ணி ஒத்துழைப்பு கொடுக்க சொல்லி இருப்பான் அப்படின்னு ஒரு சமுதாய கடமையோட, அந்த சார்ங்கிறவன யாருன்னு பார்த்து சட்டையை பிடிச்சு இழுத்துட்டு வந்து சட்டத்தின் முன்னால நிறுத்தனும்ல…
அது மா.சுப்பிரமணியா இருந்தாலும் சரி, வட்ட செயலாளரா இருந்தாலும் சரி, இல்ல அந்த லோக்கல் இன்ஸ்பெக்டரா இருந்தாலும் சரி இதைதானே நீங்க பண்ணனும். அந்த கடமையை தவறிட்டு…
அண்ணாமல, அவனுடைய மொபைல் போன்ல வீடியோ இருந்ததுங்கிறதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க.. மூணு பேரும் ராஜினாமா பண்ணிட்டு போங்க.. வெட்கமா இல்லையா? நீங்க எல்லாம் காவல்துறை அதிகாரிகள்னு ஏற்றுக்கொள்ள முடியுமா? அதுக்கப்புறம் காவல்துறை அதிகாரிகள்ட்ட ஞானசேகரன் பேசி இருக்கான்னு சொல்றாரு. குற்றம் முடிந்த உடனேயே அந்த கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர்ட்ட பேசி இருக்கான், அதையே நீங்க உங்க அறிக்கையில கொடுக்கல மற்ற காவல்துறை அதிகாரிகள் யார் யார்ட்ட பேசி இருக்கான்னு பேரெல்லாம் சொல்றாரு அதெல்லாம் விசாரிச்சங்களா? அவர்கள் வந்து என்ன தண்டனை கொடுத்தீங்க? இவனுடன் தொடர்பு இருந்தால் இது மாதிரி விஷயங்கள்ல அவங்களுக்கு உடந்தையா இருந்தாங்களா? இதெல்லாம் விசாரிக்கணும்ல… எதையுமே இல்லாம சும்மா அப்படியே நுனிப்புல் மேய்ந்த கதையாக போயிருக்கீங்க அதனால அண்ணாமலை சொல்லக்கூடிய இந்த விஷயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம், அந்த சிறப்பு பிரிவு அதிகாரிகள் மூன்று பேரையும் தண்டிக்கணும். மூன்று பேரும் குற்றவாளிகள். குற்றவாளிகளை ஹார்பரிங் த கிரிமினல் குற்றவாளிகளை வந்து காப்பாத்துனீங்கன்னா நீங்க மூணு பேரும் குற்றவாளி. எங்களுக்கெல்லாம் ஆட்சி இருந்தா மூணு பேத்தையும் டிஸ்மிஸ் பண்ணி அனுப்புவோம், நீங்க எல்லாம் இன்னும் எத்தனை பேர் வாழ்க்கைய கெடுப்பீங்க…
அடுத்தது அண்ணாமலை சொல்றாரு இது வந்து சிபிஐக்கு அனுப்பணும், சட்டரீதியா அதற்கு வாய்ப்பில்லை ஏன்நா இன்வெஸ்டிகேஷன் லெவல் பெண்டிங் இருந்தா விசாரணையில் வந்து நிலுவையில் இருந்தால் மட்டும் நீங்க சிபிஐக்கு கேட்கலாம். இது நீதிமன்றத்துக்கு போய் தீர்ப்பு கொடுத்து ஆகிவிட்டது. அதனால இதுல ஒரே ஒரு வழி என்னன்னு கேட்டீங்கன்னா நான் ஏற்கனவே சொன்னபடி அந்த பெண்ணின் வழக்கறிஞர் இதுல வந்து அப்பீல் பண்ணனும். இன்டர்வியூனர் இதுல போட்டு அப்பீல் பண்ணுங்க. அப்பீல்ல கேளுங்க. இதுல பல தவறுகள் நடந்திருக்கு. அந்த ஏரோபிளேன் மோடுல இருந்து இப்ப அண்ணாமலை சொல்லக்கூடிய அந்த வீடியோல இருந்து அத்தனையும் சொல்லி இதை மீண்டும் விசாரிக்கிறதுக்கு நீங்க அனுப்புங்க, அப்படின்னா அந்த விசாரித்த கோர்ட்டுக்கு தான் அனுப்புவாங்க, அப்ப எந்த நீதிபதியா இருந்தாலும் பயந்துகிட்டு ஒழுங்கா இதெல்லாம் விசாரிப்பாங்க.. ஒருவேளை அப்படி இது நடந்தா நீங்க அந்த நீதிமன்றத்திலே கேட்கலாம் மறுபடியும் விசாரணை நடத்தணும், இல்லன்னா
வேற மாநிலத்தை சேர்ந்த அதிகாரி ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம் சிறப்பு புலனாய்வு பிரிவு வேறு மாநிலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் ரெண்டு மூணு பேரிடம் கொடுத்து இதை விசாரிக்கணும் அப்படின்னு கேளுங்க…
சிபிஐட்ட கேட்டீங்கா இதவிட சொதப்புவான் 10 வருஷம் ஆகும் வழக்கு நீர்த்து போகும் என்றார்.