
கருணாநிதி முதன் முதலில்ஊழல் சுழி போட்டது ?
கருணாநிதி முதன்முதலில் ஊழல் சுழி போட்டது மதுரை மாவட்டம் சமயநல்லூரில் . பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்துகொண்டு மின்சாரத் துறை அமைச்சரைக் கட்டாயப்படுத்தி நன்றாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மின்சாரத் தளவாடங்களை scrap என்று கூறி விற்க நிர்பந்தித்தார் கருணாநிதி .
கருணாநிதிக்கு பயந்து கொண்டு அப்போதைய மின் துறை அமைச்சர் ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள தளவாடங்களை ,
உபயோகப்படாத பொருட்கள் என்று மின்துறை தலைமை செயற் பொறியாளரைக் கொண்டு சான்றிதழ் கொடுக்க வைத்து 20 இலட்ச ரூபாய்க்கு விற்க முடிவு செய்கிறார் .
கருணாநிதி தனக்கு வேண்டப்பட்ட கம்பெனியை அழைத்து இருபது இலட்சத்திற்கு டெண்டர் கோரச் சொல்கிறார் .
அதற்கு உபகாரமாக தமக்கு 10 இலட்சம் ரூபாயைக் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்.
கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வெறும் 20 இலட்ச ரூபாய்க்கு வாங்க கம்பெனிக்கு என்ன கசக்கவா செய்யும் ?
கம்பெனியும் ஒப்புக்கொண்டு முன்பணமாக 5 இலட்ச ரூபாயையும் , டெண்டர் முடிந்த பிறகு பாக்கி 5 இலட்ச ரூபாயையும் கொடுக்கிறார்கள்..
அன்று சமயநல்லூரில் தொடங்கிய ஊழல் கணக்கினை இன்று வரை உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது கருணாநிதிக் கூட்டம் .