June 8, 2025
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பள்ளி திறந்த நாளிலேயே விலையில்லா பாட புத்தகம், சீருடைகள் வழங்கி மாணவ,மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர்.

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பள்ளி திறந்த நாளிலேயே விலையில்லா பாட புத்தகம், சீருடைகள் வழங்கி மாணவ,மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர்.

கந்தர்வக்கோட்டை ஜீன் 02.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கோட்டை ஒன்றியத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் நோட்டு உள்ளிட்ட பொருட்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்து மாணவர்களுக்கு விலையில்லா பாடநூலை வழங்கினார்.

அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா ஒருங்கிணைத்து பேசும் போது தினந்தோறும் பாடங்களை படிக்க வேண்டும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் என் எம் எம் எஸ் தேர்விற்கான தயாரிப்புகளை இன்றிலிருந்து தொடங்கி வெற்றி பெற வேண்டும் எனவும், அனைத்து மாணவர்களும் ஆசிரியர் பெருமக்கள் நடத்தக்கூடிய பாடங்களை அன்றாடம் படிக்க வேண்டும் வீட்டுப்பாடங்கள் கொடுக்கும் பொழுது அதை வீட்டிலேயே செய்து வர வேண்டும் தொடர்ந்து வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் மேலும் கல்வி ஆண்டு சிறப்பான கல்வி ஆண்டாக அமைய வாழ்த்து தெரிவித்தார்.

மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகின்றனர். அனைத்து ஆசிரியர் பெருமக்களும் மாணவர்களை வரவேற்றனர். மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் சீருடைகளை வகுப்பு ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், செல்வி ஜாய், வெள்ளைச்சாமி, ஹில்டா உள்ளிட்டோர் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.