June 8, 2025
இலங்கையில் நடைபெற்ற யோகாசன போட்டியில் பழனி PRG பள்ளி மாணவ மாணவி சாதனை….

இலங்கையில் நடைபெற்ற யோகாசன போட்டியில் பழனி PRG பள்ளி மாணவ மாணவி சாதனை….

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள PRG தனியார் பள்ளியில் பயிலும் மாணவி மேகவர்ணிகா மற்றும் மாணவன் நகுலன் ஆகியோர் இலங்கையில் உள்ள திரிகோணமலையில் உலக அளவிலான ஐ யூ ஒய் எஃப் யோகா பெடரேசன் சார்பில் நடைபெற்ற யோகாசன போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் பலதரப்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். இதில் பலதரப்பட்ட சுற்றுகளில் பல வகையான ஆசனங்கள் மாணவ மாணவிகளால் காட்சிப்படுத்தப்பட்டது.

இதில் பழனியைச் சேர்ந்த பி ஆர் ஜி மாணவ , மாணவிகள் கப்போட்டாசனம், சிரசாசனம் , பச்சிமோத்தாசனம்போன்ற பல ஆசனங்களை காட்சிப் படுத்தி மாணவர் பிரிவில் நகுலன் முதலாம் பரிசான தங்க பரிசையும், மாணவி பிரிவில் முதலாம் பரிசான தங்க பரிசையும் தட்டிச் சென்றனர். தொடர்ந்து இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியை பள்ளி சார்பிலும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.