June 8, 2025
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஜூன் 14ஆம் தேதி நடத்தும் மாநாட்டில் நிலக்கோட்டையில் இருந்து 60 வாகனங்களில் செல்வது என்று கூட்டத்தில் தீர்மானம்

நிலக்கோட்டை :

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு ஓய்வூதியர் சங்க கட்டிடத்தில் விடுதலை சிறுத்தைகளின் கட்சி ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் போதுராசன் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மைய மாவட்ட செயலாளர் தமிழரசன் முன்னிலை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி மேலிட பொறுப்பாளர்கள் தமிழ்வாணன் ,ஜான் கிறிஸ்டோபர், வழக்கறிஞர் மணிகண்டன், கனி மனோகரன் நன்றி ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழ்வாணன், ஜான் கிறிஸ்டோபர் ஆகியோர்களுக்கு பாராட்டியும், மதசார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெறுவதால் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வதென்றும், திருச்சியில் நடைபெறும் பேரணிக்கு செல்வதற்கு கிராமங்கள் தோறும் முகாமிட்டு பொதுமக்களை திரட்டுவது குறித்தும் பல்வேறு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மாவட்ட பொறுப்பாளர்கள் ஜான் கென்னடி, காளிமுத்து,முருகன், சுதந்திரம் , ராமகிருஷ்ணன், சில்லாரி, மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.